Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
தோலையும் காலையும் பத்திரமா பாத்துக்கங்க!

நீரிழிவால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு தோலுக்கு முழுமையாக ரத்தம் பாய்வதில்லை. இதனால் தோல்களின் உணர்வுத்திறன் இதனால் குறைகிறது. அடிக்கடி புண்கள் ஏற்படுவதோடு அவை ஆழமாக போய், ஆறுவதற்கு தாமதமாகும். இந்த புண்களில் பாக்டீரியாவும், தொற்றுநோய்களும் பரவுவதால் சருமம் பாதிக்கப்படுகிறது.
படர் தாமரை
பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும் இந்த 'அரிப்பு" கோடை காலத்தில் அதிகமாக தாக்கும். பிறப்புறுப்பில் ஆரம்பித்து தொடை இடுக்குகளில் பரவும் இந்த சொறி, சினைப்புகள் சிவந்திருக்கும். வேதனையான இந்த அரிப்பு வியாதி பல தடவை உண்டாகும்.
நீரிழிவு நோயாளிகளின் பிறப்புறுப்புகளை ஈஸ்ட் தாக்குவது சர்வ சாதாரணமாகும். அரிப்புக்கு இந்த தொற்று நோய் காரணம். பெண்களுக்கு அரிப்பு, நமைச்சலுடன், வெள்ளைபடுவதும் அதிகமாகும். பல்வேறு பாதிப்புகளை இந்த பூஞ்சைத் தொற்று ஏற்படுத்தும்.
தலை படர் தாமரை
தலையில் அரிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைமுடி பாதிக்கப்பட்டு சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி நமைச்சல் அதிகரிக்கும்.
உடல் படர்தாமரை
உடலில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படும் இந்த படர்தாமரை ட்ரைகோபைடன், மைக்ரோஸ்போரம், எபிடெர்மோபையன் இவைகளால் ஏற்படும்.
வாய்ப்புண்கள்
நீரிழிவு உள்ள சிறுவர்களை அடிக்கடி வாய்ப்புண்கள் தாக்கும். இது சர்க்கரை வியாதியின் பாதிப்பு என்றே கருதப்படுகிறது.
அடிவயிறு கறுப்பாகும்
மரு, பாலுண்ணிகளினால் கழுத்தின் பின்புறம், அக்குள், மார்புகளின் கீழே, அடிவயிறு பகுதிகளில் உண்டாகும். பருமன் அதிகமுள்ளவர்களை அதிகம் பாதிக்கும். தோல் மடிப்புகள் தடித்து கறுத்து விடும். நீரிழிவு வரும் முன்பே இந்த தோல் வியாதி தோன்றும். இந்த சரும வியாதி இன்சுலின் எதிர்ப்பினால் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நக படர்தாமரை
பாக்டீரியா தாக்குதல் நகத்தில் ஏற்படும் சிதைவு. கால் நகங்களில், கை நகங்களை விட அதிகம் வரும். நகம் சதையை விட்டு பிரிந்து, சிதைந்து விடும். அவ்வப்போது கால்களை கவனித்து நகங்களை வெட்டிவிட வேண்டும்.
டினியா பெடிஸ்
வேனிற்காலத்தில் அதிகமாக வரும் தோல் அரிப்பு நோய்களில் இதுவும் ஒன்றாகும். ஒருவருக்கொருவர் தொற்றிக் கொள்ளும் சரும வியாதி, இந்த நுண்ணுயிர்களுக்கு பிடித்த ஈரமான இடம் கால் விரல்களின் இடுக்கு. இது முதலில் சிறு பகுதியாக தாக்கி பாதம் முழுவதும் புண்ணாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது பாக்டீரியா தொற்றாகவும் மாறலாம்.
கால்களில் கொப்புளங்கள்
நீரிழிவு உள்ள நோயாளிகளுக்கு திடீரென்று கொப்புளங்கள் தோன்றலாம். இவை கை, கால்கள், விரல்கள், பாதம் போன்ற பகுதிகளில் தோன்றும் இவை வலியில்லாதவை, தானாகவே மறையும். இவை அபூர்வமான டயாபடிக் பாதிப்புகள்.
வறுத்த உணவுகள் தவிர்க்கலாம்
தோல் நோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாப்பிடலாம். பருத்தி உள்ளாடைகளை அணியவும். கால்களை பராமரிக்கும் முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
சருமநோய்கள், புண்கள், காயங்கள் போன்றவர்க்கு மருந்துகடைகளில் வாங்கி உபயோகிக்கக்கூடாது. மருத்தவரின் ஆலோசனையை கேட்கலாம். வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்கவும்.
மருந்தாகும் துளசி மஞ்சள்
தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேப்ப மர இலை, ஆலமரபட்டை, துளசி, மஞ்சள் இவற்றின் பொடிகளை குளிக்கும் நீரில் கரைத்து குளிக்கலாம். இல்லை பாதிக்கப்பட்ட இடங்களை கழுவலாம். காயங்களை ஆற்ற, கற்றாழை, மஞ்சள் கலந்த ஆயுர்வேத களிம்புகளை பயன்படுத்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications