Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரையை கண்டுபிடிச்சாச்சு? இது எப்போது மக்களுக்கு கிடைக்கும் தெரியுமா?
உலகம் தோன்றிய காலம் முதலே பெண்கள் அனைத்து நாடுகளிலும், சமூகங்களிலும் இரண்டாம் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். ஆண்களின் வேலை சம்பாதிப்பது மட்டுமே, குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு, வீட்டுப்பணி என அனைத்துமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தை வளர்ப்பது முதல் குடும்பக் கட்டுப்பாடு வரை அனைத்தையும் பெண்களே சுமக்க வேண்டும்.
ஆணுறைதான் இதுவரை ஆண்களுக்கான பிரபலமான கருத்தடை சாதனமாக இருந்து வந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு முதல் முதலாக ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை இப்போதுதான் தயாரிக்கப்பட்டுள்ளது. YCT-529 என்று அழைக்கப்படும் இந்த மாத்திரை அதன் முதல் மனித பாதுகாப்பு சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது.

YCT-529 என்றால் என்ன, அது ஆண்கள் உடலில் எவ்வாறு செயல்படும்?
எந்த வகை ஹார்மோன்களும் இல்லாத YCT-529 என்ற கருத்தடை மாத்திரை, விலங்கு பரிசோதனையில் ஏற்கனவே நேர்மறையான முடிவுகளை எட்டியுள்ளது, இந்த மாத்திரை எலிகளில் பரிசோதிக்கப்பட்டபோது 99 சதவீத கர்ப்பங்களைத் தடுக்கிறது. இதுபற்றிய கூடுதல் ஆய்வுகள் தேவை என்றாலும், ஆரம்பகால சோதனையில் கிடைத்துள்ள இந்த நம்பிக்கைக்குரிய வெற்றி, மாத்திரை விரைவில் ஆண்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பிறப்பு கட்டுப்பாட்டு விருப்பமாக மாறலாம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
ஹார்மோன் இல்லாத கருத்தடை மாத்திரையான YCT-529, விந்தணுக்களுக்குள் வைட்டமின் A அணுகலைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது, இதனால் விந்து உற்பத்தியாகாமல் தடுக்கிறது. மேலும், இது டெஸ்டோஸ்டிரோன் அளவைப் பாதிக்காது. குறிப்பாக, இந்த மாத்திரை எடுத்துக் கொள்ளும்போது ஆண்களின் லிபிடோ பாதிக்கப்படாது.
எப்போது கிடைக்கும்?
2030-ன் இறுதிக்குள் ஆண் கருத்தடை மாத்திரை பொதுமக்களின் கைகளுக்கு கிடைக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள், தற்போது மனிதர்களில் பரிசோதிக்கப்படும் ஒரே கருத்தடை மாத்திரை இதுதான். சமீபத்திய சோதனையில், ஆராய்ச்சியாளர்கள் 16 ஆண்களை தேர்ந்தெடுத்து, பின்னர் பல நாட்களாக அவர்களுக்கு மாத்திரைகளின் வெவ்வேறு அளவுகளை வழங்கினர். "ஏதேனும் பக்க விளைவுகள் உள்ளதா என்பதைக் கண்டறிவதே இதன் நோக்கமாக இருந்தது" என்று ஊடக அறிக்கைகள் கூறுகிறது.
என்னென்ன பக்க விளைவுகள் ஏற்பட்டன?
இந்த சோதனையில் பங்கேற்ற ஆண்களுக்கு இதய துடிப்பு, ஹார்மோன் செயல்பாடு, வீக்கம், மனநிலை அல்லது பாலியல் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை என்று ஆய்வு சுட்டிக்காட்டியது. ஆராய்ச்சியின் அடுத்த கட்டம், ஆண்களின் விந்து உற்பத்தியைத் தடுப்பதில் மாத்திரை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை மதிப்பிடுவதற்கு பெரிய சோதனைகளை நடத்துவதாகும். கம்யூனிகேஷன்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த முதல்கட்ட பாதுகாப்பு சோதனையின் முடிவுகள், இந்த மாத்திரை அங்கீகரிக்கப்பட்டு கிடைக்கப்பெறுவதற்கான ஒரு முக்கியமான முதல் படியைக் குறிக்கின்றன என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
சோதனையின் முடிவு என்ன சொன்னது?
ஜர்னல் கம்யூனிகேஷன்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, 180 மி.கி வரையிலான YCT-529 இன் ஒற்றை டோஸ்கள் இதய துடிப்பு, ஹார்மோன், பாலியல் ஹார்மோன்-பிணைப்பு, பாலியல் ஆசை அல்லது மனநிலை ஆகியவற்றில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.
தற்போது வரை ஆண்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு முறைகள் வாஸெக்டோமிகள் மற்றும் ஆணுறை மட்டுமே. இந்த மாத்திரை பொதுமக்களுக்கு கிடைக்கத் தொடங்கினால் அது உலகளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
