Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
அழகிய பட்டுப்புடவை அணிந்து கணவர் ரன்வீருடன் திருப்பதி பெருமாளை தரிசித்த தீபிகா!
தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங், தங்களின் முதல் திருமண நாளன்று முதலில் திருப்பதி பெருமாளை சந்தித்து ஆசீர்வாதம் பெற திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பையில் இருந்து நேற்றே இவர்கள் கிளம்பிவிட்டனர்.
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான மற்றும் ரொமான்டிக்கான தம்பதிகள் தான் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். இவர்கள் இருவருக்கும் காதலித்து 2018 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளின் திருமணம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் நடைபெற்றது.

பெரும்பாலும் பிரபலங்கள் தங்களின் முதல் திருமண விழாவைக் கொண்டாடுவதற்கு வெளிநாடுகளுக்கு செல்வது தான் வழக்கம். ஆனால் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங், தங்களின் முதல் திருமண நாளன்று முதலில் திருப்பதி பெருமாளை சந்தித்து ஆசீர்வாதம் பெற திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பையில் இருந்து நேற்றே இவர்கள் கிளம்பிவிட்டனர். இன்று தங்களது திருமண நாளன்று குடும்பத்தினருடன் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.
இங்கு திருப்பதி பெருமாளை தரிசனத்தின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களும், தீபிகா படுகோனேவின் தோற்றம் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

சப்யசாச்சி புடவை
இது தான் தீபிகா படுகோனே திருப்பதிக்கு அணிந்து வந்த சிவப்பு நிற பட்டுப்புடவை. இந்த புடவை டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்தது. தீபிகா அணிந்திருந்த சிவப்பு நிற புடவை கோல்டன் ஜரிகையால் அழகாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. தீபிகா படுகோனே தனது திருமண நாளன்று அணிந்து வந்த இந்த சிவப்பு நிற புடவை அவருக்கு மணப்பெண் தோற்றத்தைக் கொடுத்தது எனலாம்.

ஹை-நெக் ஜாக்கெட்
தீபிகா படுகோனே இந்த சிவப்பு நிற புடவைக்கு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைன் அற்புதமாக இருந்தது. அதுவும் கோல்டன் ஜரிகை கொண்ட ஹை-நெக் ஜாக்கெட் அணிந்தது அவரது தோற்றத்தை மிகவும் சிறப்பாக காட்டியது.

மேக்கப்
தீபிகா சிவப்பு நிற பட்டுப் புடவைக்கு மேற்கொண்ட மேக்கப் அற்புதமாக இருந்தது. இவர் உதட்டிற்கு கோரல் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, லேசாக கன்னங்களுக்கு ப்ளஷ் அடித்து சிம்பிளான மேக்கப்பை மேற்கொண்டிருந்தார். மேலும் நெற்றியின் உச்சியில் குங்குமத்தை வைத்திருந்தது, அவரை மங்களகரமாக காட்டியது எனலாம்.

ஹேர் ஸ்டைல்
தீபிகா படுகோனே தான் அணிந்து வந்த பட்டுப்புடவைக்கு கொண்டை போட்டிருந்தார். இதில் ஒரு குறை என்னவென்றால், மல்லிகைப் பூ இல்லாதது தான். அது மட்டும் வைத்திருந்தால், இன்னும் அழகாக இருந்திருப்பார்.

ஆபரணங்கள்
தீபிகா சப்யசாச்சியின் சிவப்பு நிற பட்டுப் புடவைக்கு ஏற்றவாறு, தங்க ஆபரணங்களைத் தேர்ந்தெடுத்து அணிந்திருந்தார். அதில் கழுத்தையொட்டி நெக்லேஸ் மற்றும் நீளமான ஆரம் அணிந்து, காதுகளுக்கு பெரிய ஜிமிக்கி கம்மல் அணிந்திருந்தது, அட்டகாசமாக இருந்தது.

ரன்வீர் சிங்
நடிகர் ரன்வீங் சிங் கூட தீபிகா படுகோனேவிற்கு இணையாக அற்புதமாக காணப்பட்டார். அதுவும் அவர் ஷெர்வானி அணிந்து, மேலே பட்டு பார்டர் கொண்ட பிங்க் நிற ஷால், காதுகளுக்கு வளையம் அணிந்து மாப்பிள்ளை தோற்றத்தில் சிறப்பாக காட்சியளித்தார்.

புன்னகை
இது திருப்பதி பெருமாளை தரிசித்த பின் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே சந்தோஷத்தில் புன்னகைக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ.

குடும்பம்
இது திருப்பதியில் குடும்பத்தினருடன் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே சேர்ந்து எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications











