Latest Updates
-
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா?
தொடையின் உட்புறத்தில் ரொம்ப அரிக்குதா? இதோ அதைப் போக்கும் சில எளிய வழிகள்!
சிலர் கால்களுக்கு இடையில் தொடைப்பகுதில் எப்போதும் சொரிந்து கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.கோடை காலத்தில் அதிகமான வெப்பம் காரணமாக உண்டாகும் வியர்வை காரணமாக தொடை பகுதியில் இவ்வித அரிப்பு உண்டாகலாம
சிலர் கால்களுக்கு இடையில் தொடைப்பகுதில் எப்போதும் சொரிந்து கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். உங்களுக்கு நெருக்கமானவர்கள் கூட இந்த பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும். கோடை காலத்தில் அதிகமான வெப்பம் காரணமாக உண்டாகும் வியர்வை காரணமாக தொடை பகுதியில் இவ்வித அரிப்பு உண்டாகலாம். கால்களுக்கு இடையில் இருப்பதால் இந்த அரிப்பு எளிதில் விலகுவதில்லை.

அலுவலகத்தில் அல்லது பொது இடங்களில் நாம் இருக்கும் போது இந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டால் அது ஒருவித அசோகரியத்தை உண்டாக்கலாம். இந்த பாதிப்பை எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் விரைவாக போக்குவதற்கான தீர்வுகளை உங்களுக்கு நாங்கள் இப்போது தரவிருக்கிறோம். இவை ஏற்கனவே முயற்சிக்கப்பட்டு நல்ல தீர்வைத் தந்துள்ளன. எனவே நீங்கள் நிச்சயம் முயற்சிக்கலாம்.

நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்
நெல்லிக்காய் உட்கொள்வதால் பல்வேறு நோய்கள் குணமாகும் நிலையில், தொடையில் உள்ள அரிப்பைப் போக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது. நெல்லிக்காயின் தோல்பகுதியுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து அரிப்பு இருக்கும் இடத்தில் தடவவும். அடுத்த இரண்டு நாட்களில் அரிப்பு காணாமல் போய்விடும்.

கடுகு எண்ணெய் , தண்ணீர் மற்றும் எலுமிச்சை
எலுமிச்சை சாற்றில், கடுகு எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து, அந்த விழுதை அரிப்பு உள்ள இடத்தில் தடவ அரிப்பு உடனடியாக மறைகிறது.

செலரி இலைகள்
20 கிராம் செலரி இலைகளை 100 கிராம் அளவு தண்ணீரில் கொதிக்க விடவும். தொடையில் அரிப்பு உண்டாகும் போது இந்த நீர் கொண்டு அந்த இடத்தைக் கழுவவும். செலரி இலையை அரைத்து அரிப்பு உள்ள இடத்தில் தடவுவதால் கூட அரிப்பை வேரிலிருந்து அகற்றிவிட முடியும்.

புளிப்பு தயிர் சேர்க்கலாம்
அரிப்பு இருக்கும் தொடை பகுதியில் புளிப்பு தயிரைத் தடவவும். இதனால் அரிப்பில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

எலுமிச்சை மற்றும் வாழைப்பழம்
வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நன்மை தரும் ஒரு உணவுப்பொருள். அதேப்போல் பல்வேறு நோய்களுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாகும். எலுமிச்சை சாறு மற்றும் வாழைப்பழ கலவையை அரிப்பு இருக்கும் இடத்தில் தடவுவதால் அரிப்பு விரைவில் குணமடையும்.

எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அரிப்பு இருக்கும் இடத்தில் தடவி கைகளால் மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் அரிப்பு விரைவாக குணமடையும்.

தோல் சார்ந்த நோய்களுக்கான எளிய தீர்வுகள்
அரிப்பு, எக்ஸிமா, படை போன்ற தோல் சார்ந்த நோய் யாருக்கும் ஏற்படலாம். இவை எல்லாவற்றிற்கும் இயற்கையான தீர்வுகள் நல்ல பலன் கொடுக்கும். பசு நெய் இதற்கு ஒரு சிறந்த தீர்வைத் தரும். புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மைக் கொண்ட பசு நெய் இந்த பாதிப்பிற்கு ஏற்ற ஒரு தீர்வாகும். பசு நெய் எவ்வளவுக்கு பழமையானதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு புளிப்பு தன்மை கொண்டிருக்கும். அந்த அளவிற்கு விலைமதிப்பற்றதாகவும் இருக்கும். பழைய நெய் மிகவும் புளிப்பாக இருப்பதால் பல்வேறு சரும நோய்களுக்கு தீர்வைத் தருகிறது.

நெய்யை எவ்வாறு பயன்படுத்துவது?
எக்ஸிமா போன்ற பாதிப்புகளுக்கு நெய் ஒரு வரப்பிரசாதம். பசு நெய் எவ்வளவு சாப்பிட்டாலும் எந்த ஒரு பக்க விளைவும் இருப்பதில்லை, மாறாக பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. படை போன்ற பாதிப்புகளுக்கு கருமிளகு ஈயமஞ்சள் , கால்வனைஸ் சால்மன் ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்து பசுநெய்யுடன் கலக்கவும். இந்த கலவையை எக்சிமா பாதிப்பு உள்ள இடத்தில் ஒருநாளில் 3-4 முறை தடவவும். அடுத்த சில நாட்களில் எக்ஸிமா முற்றிலும் மறைந்துவிடும்.

முடிவுரை
கோடை காலத்தில் சரும தொற்று உண்டாவதற்கான பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இந்த வகை சரும தொற்று சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமலிருந்தால் பல்வேறு தீவிர பாதிப்புகளை உண்டாக்கக்கூடும். குறிப்பாக இந்த வகை தொற்று பாதிப்பு பிறப்புறுப்பு அல்லது அக்குள் போன்ற மறைவான பகுதிகளில் உண்டாகும் போது இன்னும் தீவிர பாதிப்பை உண்டாக்கும். ஈரமான ஆடை, இறுக்கமான ஆடை , வியர்வை, சோப்பு போன்றவற்றின் காரணமாக இவ்வித நோய்கள் உண்டாகலாம். இவ்வித தொற்று காரணமாக சருமம் சிவந்து போவது, தடிப்புகள் உண்டாவது, நீடித்த அரிப்பு போன்றவை ஏற்படும். இந்த தொற்று பரவும் போது அதனை குணப்படுத்த நீண்ட நாட்கள் ஆகலாம்.



Click it and Unblock the Notifications