இந்த குளிர்காலத்துல உங்க முகத்துல கடலை மாவை யூஸ் பண்ணுறீங்களா? அப்ப உங்களுக்கான அதிர்ச்சியான செய்தி இதுதான்!

நீங்கள் சரியான முறையில் கடலை மாவை பயன்படுத்தினால், அது டான்னை நீக்கி, சருமத்தை பிரகாசமாக்கி, ஜொலிக்க வைக்க உதவும். கூடுதலாக, இது வயதான அறிகுறிகளையும் குறைக்கும்.

பொதுவாக உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் கடலை மாவு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இது உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களை செய்கிறது. ஆனால், குளிர்காலத்தில் கடலை மாவு உங்கள் சருமத்திற்கு பாதுகாப்பானதா? அல்லது தீங்கு விளைவிக்கக்கூடியதா? என்று உங்களுக்கு தெரியுமா? கடலை மாவு சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள். உங்கள் பாட்டி கூட இந்த மூலப்பொருளை அதன் சரும நன்மைகளுக்காக பயன்படுத்தி இருப்பார்கள். கடலை மாவு ஒரு எக்ஸ்ஃபோலியண்டாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் நீண்ட காலமாக அழகுக்கான பிரதான பொருளாக இருந்து வருகிறது.

know-the-side-effects-of-using-besan-on-face-in-winter-in-tamil

இருப்பினும், சில பெண்கள் இது தங்கள் சருமத்தை வறண்டதாக மாற்றுவதாக புகார் கூறுகின்றனர். நீங்களும் இதை அனுபவித்திருக்கிறீர்களா? அப்படியானால், இது ஏன் நிகழ்கிறது மற்றும் முகத்தில் கடலை மாவு பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடலை மாவு சருமத்திற்கு தீங்கு விளைவிக்குமா?

கடலை மாவு சருமத்திற்கு தீங்கு விளைவிக்குமா?

கடலை மாவு உங்கள் நிறமி, கரும்புள்ளிகள் மற்றும் வடுக்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராட உதவும். பல தோல் பிரச்சனைகளைச் சமாளிக்க உதவும் அதன் சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகளுக்காக கடலை மாவு அறியப்படுகிறது. இது ஒரு சரியான ஸ்க்ரப்பாக மட்டும் செயல்படாமல், கடலை மாவில் உள்ள துத்தநாகம் வெடிப்பு அபாயத்தைக் குறைத்து உங்கள் சருமத்திற்குப் பளபளப்பைச் சேர்க்கிறது. கடலை மாவு உங்கள் சருமத்தை உலர வைக்கும் என்று நீங்கள் நினைக்கும் போது, அது உண்மையில் தோல் எரிச்சலைத் தணித்து மென்மையாக மாற்ற உதவுகிறது.

குளிர்காலத்தில் ஏன் வேண்டாம்?

குளிர்காலத்தில் ஏன் வேண்டாம்?

இருப்பினும், நீங்கள் அடிக்கடி கடலை மாவை பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்தை உலர்த்தும். கடலை மாவு இயற்கையில் காரமானது மற்றும் சருமத்தின் pH அமிலத்தன்மை கொண்டது. எனவே அதிகப்படியான அல்லது அடிக்கடி கடலை மாவை தோலில் பயன்படுத்துவது ஒரு மோசமான யோசனையாகும். ஏனெனில் இது உங்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது அதிக வறட்சிக்கு வழிவகுக்கும், குறிப்பாக குளிர்ந்த காலநிலையில் அதிக வறட்சியை ஏற்படுத்தும். எனவே, குளிர்காலங்களில் அதை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். மேலும், நீங்கள் முகப்பரு மற்றும் வெடிப்புகளால் பாதிக்கப்பட்டிருந்தால், கடலை மாவு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

மனதில் கொள்ள வேண்டியவை

மனதில் கொள்ள வேண்டியவை

நீங்கள் சரியான முறையில் கடலை மாவை பயன்படுத்தினால், அது டான்னை நீக்கி, சருமத்தை பிரகாசமாக்கி, ஜொலிக்க வைக்க உதவும். கூடுதலாக, இது வயதான அறிகுறிகளையும் குறைக்கும். எனவே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், குளிர்காலத்தில் கடலை மாவை பயன்படுத்துவதற்கான சரியான வழியைக் கற்றுக்கொள்வதுதான். கடலை மாவை பயன்படுத்துவதற்கு முன் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.

கடலை மாவு ஃபேஸ் பேக்குகள்

கடலை மாவு ஃபேஸ் பேக்குகள்

குளிர்காலத்தில் எலுமிச்சைபழம் கலந்த கடலை மாவை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். குளிர் மற்றும் வறண்ட காலநிலையால் ஏற்கனவே வறண்டு இருக்கும் சருமம், மேலும் வறண்டு அரிப்பை ஏற்படுத்தும். இரண்டாவதாக, உங்கள் தோல் வகை ஏற்கனவே வறண்டு இருந்தால், குளிர்காலத்தில் உங்கள் முகத்திலோ அல்லது உடலிலோ கடலை மாவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நிலைமையை மோசமாக்கும். நீங்கள் இன்னும் கடலை மாவு ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தினால், 10 நிமிடங்களுக்குள் அதை அகற்றுவதை உறுதிசெய்யவும். நீண்ட நேரம் வைத்திருந்தால், அது வறட்சி, எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும். குளிர்காலத்திற்கு ஏற்ற கடலை மாவு ஃபேஸ் பேக்குகளை இங்கே காணலாம்.

தேனுடன் கலந்த கடலை மாவு

தேனுடன் கலந்த கடலை மாவு

ஒன்றரை தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு தேக்கரண்டி கடலை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் நன்கு கலக்கவும். பேஸ்ட்டின் நிலைத்தன்மை தடிமனாக இருந்தால், நீங்கள் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்க்கலாம். இந்த உலர் சருமத்திற்கு உகந்த ஃபேஸ் பேக்குகளை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உங்கள் சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் மாற்ற இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.

தயிருடன் கலந்த கடலை மாவு

தயிருடன் கலந்த கடலை மாவு

1-2 தேக்கரண்டி தயிருடன் 2 தேக்கரண்டி கடலை மாவு கலக்கவும். பேஸ்ட் செய்ய நன்கு கிளறவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் முழுவதும் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். இப்போது அதை மற்றொரு 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இப்போது, அதை தேய்த்து, உங்கள் தோலில் இருந்து அகற்றி, வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை கழுவவும். பொலிவான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் பயன்படுத்தவும்.

பாதாம் எண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவுடன் சேருங்கள்

பாதாம் எண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவுடன் சேருங்கள்

ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை கலக்கவும். மென்மையான பேஸ்ட்டை உருவாக்க இந்த பொருட்களை நன்கு கலக்கவும். கலவை மிகவும் தடிமனாக இருந்தால், நீங்கள் தேன் அல்லது தயிர் சேர்க்கலாம். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் ஊற விடவும். அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வறண்ட சருமத்தைத் தவிர்க்க வாரத்திற்கு இரண்டு முறை இந்த பேக்கை பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, January 14, 2023, 21:14 [IST]
Desktop Bottom Promotion