Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
அஞ்சறை பெட்டியில் உள்ள பொருட்களை வைத்து வழுக்கையை சரி செய்வது எப்படி..?
ஒவ்வொரு உணவு பொருளுக்குள்ளும் பலவித பயன்கள் இருக்கத்தான் செய்யும். உடல் ஆரோக்கியம், மன நலம், முக ஆரோக்கியம் மற்றும் முடியின் ஆரோக்கியம் ஆகிய எண்ணற்ற வகையில் இவற்றின் பயன்கள் இருக்கும். ஒரு சில உணவு பொருட்கள் மட்டும் தான் முகத்தில் இருக்க கூடிய பருக்கள், கரும்புள்ளிகள், முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை குணப்படுத்த கூடும்.

அந்த வகையில் நம் அஞ்சறை பெட்டியிலுள்ள சில பொருட்கள் பயன்படுகிறது. இவை முகத்தில் உள்ள பிரச்சினைகளை ஒரு வாரத்திற்குள்ளே குணப்படுத்தி விடும். எப்படி இந்த உணவு பொருட்கள் இவ்வளவு மூலிகை தன்மை கொண்டுள்ளது என்பதையும்... எவ்வாறு நமது முக பிரச்சினைகளை தீர்ப்பது என்பதையும் இனி தெரிந்து கொள்வோம்.

பருக்களை போக்க...
முகத்தில் உள்ள பருக்களை முழுவதுமாக விரட்டி அடிக்க ஒரு அற்புதமான வழி உள்ளது. அதுவும் நம் வீட்டு அஞ்சறை பெட்டி பொருளில் இருந்தே நாம் இதை செய்யலாம். இதற்கு தேவையானவை...
யோகர்ட் 1 ஸ்பூன்
கருப்பு மிளகு தூள்

செய்முறை :-
முதலில் மிளகு தூளை யோகர்டுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இதனை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, பருக்கள் முழுவதையும் நீக்கி விடும்.

கண்ணின் பிரச்சினைக்கு
நாள் முழுக்க லேப்டாப்பிலே வேல செஞ்சு கண்ணுலா எரியுதா..? அதோடு சேர்த்து கண்ணு வீக்கமாவும் இருக்கா..? இனி இதற்கு சரியான தீர்வு கொத்தமல்லி விதைகள் தான். கொத்தமல்லியை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை கண்ணில் விட்டு கொள்ளுங்கள். மேலும், சிறிது ஒத்தடமும் கொடுங்கள். இவ்வாறு செய்வதால் கண் எரிச்சல், கண் மங்கிய தன்மை குணமாகி விடும்.

முகம் மினுமினுக்க
முகம் பளபளவென மின்ன, ஒரு எளிய வழி உள்ளது. இதற்கு தேவையானவை...
மஞ்சள் 2 ஸ்பூன்
தேன் 2 ஸ்பூன்

செய்முறை :-
மஞ்சளை தேனுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். மஞ்சளில் உள்ள அந்தோ ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பொலிவு தரும் தன்மை உங்களை பளபளவென மாற்றும். அத்துடன் தேன் உங்களின் முகத்தை வெண்மையாக ஆக்கும்.

ஜாதிக்காய் முறை...
முகம் என்றுமே பொலிவுடன் அழகாக இருக்க ஜாதிக்காய் குறிப்பு போதும். இதனை தயாரிக்க தேவையானவை...
ஜாதிக்காய் பொடி அரை ஸ்பூன்
பால் 1 ஸ்பூன்
தேன் அரை ஸ்பூன்

செய்முறை :-
ஜாதிக்காய் பொடியுடன் பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு முகத்தில் பூசவும். 15 நிமிடம் சென்று வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்து எந்தவித பிரச்சினைகளையும் ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.

வழுக்கை பிரச்சினைக்கு
முடி அதிகமாக உதிர்ந்து வழுக்கை விழுந்துள்ளதா..?இதற்காக ஏதேதோ செய்ய வேண்டாம். வெறும் பூண்டை வைத்தே நம்மால் எளிதாக இதற்கு தீர்வு தர முடியும்.
தேவையானவை...
பூண்டு 3 பல்
ஆலிவ் எண்ணெய் அரை கப்

செய்முறை :-
பூண்டை சிறிது சிறிதாக நறுக்கி கொண்டு ஒரு பாட்டிலுக்குள் போட்டு கொள்ளவும். அடுத்து பூண்டு மூழ்கும் வரை ஆலிவ் எண்ணெய்யை ஊற்றி கொண்டு 10 நாட்கள் ஊற வைத்து அதன்பின் தலைக்கு பயன்படுத்தலாம். அத்துடன் நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊறிய பிறகு தலைக்கு குளிக்கலாம்.



Click it and Unblock the Notifications