Latest Updates
-
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
முகச்சுருக்கம் போக்கி இளமையா வச்சிருக்க வெந்தயத்தை எப்படி பயன்படுத்தலாம்?
முகம் பளிச்சிட வைத்துக் கொள்வது எல்லா சமயங்களிலும் முடியாதென்றாலும் தொடர்ந்து பராமரித்தால் அவ்வாறு இருக்க முடியும். சுருக்கமில்லா இளமையான சருமம் பெற வெந்தயத்தை பயன்படுத்தும் முறை இங்கே!
வெந்தயம் தலைமுடிக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல அற்புதங்களை தருகிறது. அது சுருக்கம், கருமை, முகபப்ரு என பலப் பிரச்சனைகளை குணமாக்குகிறது, முகச் சுருக்கத்தையும் போக்கும்.
முகத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால் வெந்தயத்தை உபயோகப்படுத்தும்போது தேவையான ஈரப்பதம் பெற்று முகம் பளபளக்கும். அதனை பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.

வெந்தய க்ளின்சர் :
வெந்தயத்தை பாலில் ஊற வைத்து அதனை அரைத்து முகத்தில் பேஸ்ட் போல் போடுங்கள். சில நிமிடங்கள் மசாஜ் செய்து பின் 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் சுத்தமாக இருக்கும்.

வெந்தய ஸ்க்ரப் :
அதிக எண்ணெய் பசை இருப்பவர்களுக்கான குறிப்பு இது. வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் 1 ஸ்பூன் அளவு தேன் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்யுங்கள். இதனால் அதிக எண்ணெய் முகத்தில் வழிவது தவிர்க்கப்படும்.

வெந்தய ப்ளீச் :
வெயிலில் சென்று முகம் கருமையடைந்திருந்தால் அதற்கு இந்த குறிப்பு உதவும்.
வெந்தயத்தை அரை கப் அளவு எடுத்து நீரில் போட்டு கொதிக்க விடுங்கள். அதனை ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.
மறு நாள் அந்த நீரைக் கொண்டு முகம், கழுத்து கை என கருமை படியும் இடங்களில் எல்லாம் கழுவுங்கள். இதனால் முகத்தில் உள்ள கருமை மறைந்து பிரகாசிக்கும்.

வெந்தய டோனர் :
வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் யோகார்ட் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளுங்கள். முகத்தை கழுவிய பின் இந்த கலவையை முகத்தில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மெருகேறும்.



Click it and Unblock the Notifications