Latest Updates
-
காலசர்ப்ப யோகத்தால் இன்று முதல் ஜூன் 23 வரை இந்த 3 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கும்.. உஷார்.. -
வெயில் மற்றும் மழையால் வீட்டில் புழுக்கமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
கீரை வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா மிளகூட்டல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
1/2 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. ருசி அல்டிமேட்டா இருக்கும்.. -
சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மழைக்காலத்தில் வீட்டில் பணமும் ஆரோக்கியமும் குறையாமல் இருக்கணுமா? இந்த 5 வாஸ்து ரகசியங்களை உடனே பின்பற்றுங்க! -
முக்கியமான 5 ஊட்டச்சத்து குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகளும்.. அவற்றை தடுக்கும் உணவுகளும்.. -
சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 அடிப்படை ரகசியங்கள் - இதை பாலோ பண்றவங்க பெரிய ஆளா வருவார்களாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: ஜூன் கடைசி இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. -
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
முகச்சுருக்கம் போக்கி இளமையா வச்சிருக்க வெந்தயத்தை எப்படி பயன்படுத்தலாம்?
முகம் பளிச்சிட வைத்துக் கொள்வது எல்லா சமயங்களிலும் முடியாதென்றாலும் தொடர்ந்து பராமரித்தால் அவ்வாறு இருக்க முடியும். சுருக்கமில்லா இளமையான சருமம் பெற வெந்தயத்தை பயன்படுத்தும் முறை இங்கே!
வெந்தயம் தலைமுடிக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல அற்புதங்களை தருகிறது. அது சுருக்கம், கருமை, முகபப்ரு என பலப் பிரச்சனைகளை குணமாக்குகிறது, முகச் சுருக்கத்தையும் போக்கும்.
முகத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால் வெந்தயத்தை உபயோகப்படுத்தும்போது தேவையான ஈரப்பதம் பெற்று முகம் பளபளக்கும். அதனை பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.

வெந்தய க்ளின்சர் :
வெந்தயத்தை பாலில் ஊற வைத்து அதனை அரைத்து முகத்தில் பேஸ்ட் போல் போடுங்கள். சில நிமிடங்கள் மசாஜ் செய்து பின் 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் சுத்தமாக இருக்கும்.

வெந்தய ஸ்க்ரப் :
அதிக எண்ணெய் பசை இருப்பவர்களுக்கான குறிப்பு இது. வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் 1 ஸ்பூன் அளவு தேன் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்யுங்கள். இதனால் அதிக எண்ணெய் முகத்தில் வழிவது தவிர்க்கப்படும்.

வெந்தய ப்ளீச் :
வெயிலில் சென்று முகம் கருமையடைந்திருந்தால் அதற்கு இந்த குறிப்பு உதவும்.
வெந்தயத்தை அரை கப் அளவு எடுத்து நீரில் போட்டு கொதிக்க விடுங்கள். அதனை ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.
மறு நாள் அந்த நீரைக் கொண்டு முகம், கழுத்து கை என கருமை படியும் இடங்களில் எல்லாம் கழுவுங்கள். இதனால் முகத்தில் உள்ள கருமை மறைந்து பிரகாசிக்கும்.

வெந்தய டோனர் :
வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் யோகார்ட் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளுங்கள். முகத்தை கழுவிய பின் இந்த கலவையை முகத்தில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மெருகேறும்.



Click it and Unblock the Notifications