Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
முகச்சுருக்கம் போக்கி இளமையா வச்சிருக்க வெந்தயத்தை எப்படி பயன்படுத்தலாம்?
முகம் பளிச்சிட வைத்துக் கொள்வது எல்லா சமயங்களிலும் முடியாதென்றாலும் தொடர்ந்து பராமரித்தால் அவ்வாறு இருக்க முடியும். சுருக்கமில்லா இளமையான சருமம் பெற வெந்தயத்தை பயன்படுத்தும் முறை இங்கே!
வெந்தயம் தலைமுடிக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல அற்புதங்களை தருகிறது. அது சுருக்கம், கருமை, முகபப்ரு என பலப் பிரச்சனைகளை குணமாக்குகிறது, முகச் சுருக்கத்தையும் போக்கும்.
முகத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால் வெந்தயத்தை உபயோகப்படுத்தும்போது தேவையான ஈரப்பதம் பெற்று முகம் பளபளக்கும். அதனை பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.

வெந்தய க்ளின்சர் :
வெந்தயத்தை பாலில் ஊற வைத்து அதனை அரைத்து முகத்தில் பேஸ்ட் போல் போடுங்கள். சில நிமிடங்கள் மசாஜ் செய்து பின் 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் சுத்தமாக இருக்கும்.

வெந்தய ஸ்க்ரப் :
அதிக எண்ணெய் பசை இருப்பவர்களுக்கான குறிப்பு இது. வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் 1 ஸ்பூன் அளவு தேன் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்யுங்கள். இதனால் அதிக எண்ணெய் முகத்தில் வழிவது தவிர்க்கப்படும்.

வெந்தய ப்ளீச் :
வெயிலில் சென்று முகம் கருமையடைந்திருந்தால் அதற்கு இந்த குறிப்பு உதவும்.
வெந்தயத்தை அரை கப் அளவு எடுத்து நீரில் போட்டு கொதிக்க விடுங்கள். அதனை ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.
மறு நாள் அந்த நீரைக் கொண்டு முகம், கழுத்து கை என கருமை படியும் இடங்களில் எல்லாம் கழுவுங்கள். இதனால் முகத்தில் உள்ள கருமை மறைந்து பிரகாசிக்கும்.

வெந்தய டோனர் :
வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் யோகார்ட் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளுங்கள். முகத்தை கழுவிய பின் இந்த கலவையை முகத்தில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மெருகேறும்.



Click it and Unblock the Notifications