Latest Updates
-
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்..
இந்த 5 சிகிச்சைகளை பார்லரில் மட்டும் தான் செய்ய வேண்டும்! இல்லை என்றால் விளைவுகள் பயங்கரமாகும் !
பார்லரின் மட்டுமே செய்ய வேண்டியது அழகு சிகிச்சைகள்
அழகை கூட்டும் சில விஷயங்களான வாக்சிங் உட்பட அனைத்தையும் நாம் பார்லர் போகாமல், வீட்டிலேயே செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் ஒரு சில விஷயங்களை அழகுக்கலை வல்லுனர்களால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும். ஏனெனில், ஒரு சில அழகுக்கலை சிகிச்சைகளை நாம் வீட்டிலேயே செய்து கொள்ளும் போது சில பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது என சரும பராமரிப்பு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருக்களை நீக்குதல்
மருக்களை நீக்குவதற்கு நூல் போன்ற பொருட்களை கொண்டு மருவிற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தி, மருக்கள் நீக்கப்படுகின்றன. இந்த சிகிச்சையை நீங்கள் வீட்டில் செய்தால் அது முற்றிலும் தவறானது. அதிக இரத்த கசிவை ஏற்படுத்திவிடும்.

வாக்சிங்
வீட்டிலேயே வாக்சிங் செய்வதை சரியான முறை என்றும் கூறலாம், தவறான முறை என்றும் கூறலாம். வாக்சிங் செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டியது அவசியம். கவனமில்லாமல் செய்தால் ஒரு சில நேரங்களில் தோல் உரிந்து வந்துவிடக்கூடும்.

கரும்புள்ளிகளை நீக்குதல்
கரும்புள்ளிகளை வேருடன் பிடுங்குவதற்கான சிகிச்சையை நாம் வீட்டிலேயே செய்தால், தொற்றுக்கள் ஏற்பட்டுவிடும். இது ஆபத்துகளை விளைவிக்கும். எனவே நீங்கள் முகப்பருக்களை பிடுங்குதல் மற்றும் கரும்புள்ளிகளை பிடுங்குதல் போன்றவற்றை மருத்துவரிடமே விட்டுவிடுவது நல்லது.

டை அடிப்பது!
கண் இமைகளுக்கு நீங்கள் டை அடிப்பவராக இருந்தால், இதனை வீட்டில் முறையான பயிற்சி இன்றி செய்யாதீர்கள். இவ்வாறு செய்தால், கெமிக்கல்கள் கண்ணுக்குள் சென்று விட நீங்களே காரணமாகிவிடுவீர்கள். எனவே இதனை அழகுக்கலை நிபுணர்களிடம் விட்டுவிடுங்கள்.

திரெட்டிங்
திரெட்டிங் சிறந்த அழகுக்கலை நிபுணர்களிடம் செய்வதே மிகச்சிறந்தது. கண்களின் அருகில் மிக முக்கிய நரம்புகள் இருக்கும். இதனை கையாள தெரியாமல் செய்வது பெரும் ஆபத்தில் கொண்டு சேர்க்கும்.



Click it and Unblock the Notifications