Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க...
ஒரே ஒரு வாசலின் போதும். உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகுபடுத்தலாம்!! எப்படி தெரியுமா?
வாசலின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லி தலை முதல் கால் வரை அழகுப்படுத்த உபயொகிக்கலாம். குறிப்பாக குளிர்காலத்தில் வரும் பிரச்சனைகளான சரும வறட்சி மற்றும் உதட்டில் உண்டாகும் பிளவு வறட்சி ஆகிய்வற்றை குணப்படுத்து
வெகு சிலப் பொருட்கள்தான் எல்லாவற்றிற்கும் பயன்படுத்த முடியும். கற்றாழை, தேன் போல், பெட்ரோலியம் ஜெல்லியும் அப்படித்தான். தலை முதல் பாதம் வரை இதனை ப்யன்படுத்தலாம். பலன்கள் அதிகம்.

வாசலின் இயற்கையில் வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும். தோலில் உண்டான சொரசொரப்பு, பாதிப்பு, கருமை போன்றவற்றையும் சரிப்படுத்தும். வாசலினைக் கொண்டு எப்படி உங்களை அழகுப்படுத்தலாம்? இதனை தொடர்ந்து படியுங்கள்.

பாதவெடிப்பு :
பாத வெடிப்பிற்கு மிக முக்கியமான கார்ணம் வறண்ட சருமம். வறட்சியால் சரும செல்கள் பலமிழந்து இருக்கும்போது கொழுப்புப் பாடிவங்கள் எளிதில் உடைந்து வெடிப்பை உண்டாக்குகிறது.
தினமும் இரவில் வாசலினை த்டவி விட்டு படுங்கள். வெடிப்பு ஒரே வாரத்தில் மறைந்துவிடும்.

கண்ணிமை அடர்த்தியாக :
கண் இமை மெலிதாக அடர்த்தியில்லாமல் இருந்தால் தினமும் காலை மாலை என இருவேளையும் வாசலினை தடவுங்கள். அடர்த்தியான இமையோடு, அழகான இமைகளை இது தரும்.

பளபளக்கும் நகங்கள் :
நகங்கள் ஆரோக்கியமாக இல்லையா? எளிதில் உடைந்து அல்லது அடிக்கடி சொத்தை ஏற்பட்டு அசிங்கமாக இருக்கிறதா? தினமும் வாசலினை நகங்களில் பூசி வாருங்கள். ஆரோக்கியமான நகத்தை பெறுவீர்கள்.

அதிக நேரம் வாசனை இருக்க :
என்னதான் பெர்ஃப்யூம் அடித்தாலும் சில மணி நேரம்கூட வாசனை நீடிப்பதில்லை . இதனை தவிர்க்க டியோடரண்ட் அல்லது பெர்ஃப்யூம் உபயோகிப்பதற்கு முன் வாசலினை தடவிவிட்டு அடித்தால் நாள் முழுவதும் வாசனை நீடிக்கும்.

கூந்தலின் நுனி வறண்டு இருக்கிறதா?
கூந்தலின் நுனி பிளவு பட்டு கரடுமுரடாக இருந்தால் வாசலினை முடியின் நுனியில் தடவுங்கள். இதனால் கூந்தல் மிருதுவாக பிளவு மறைந்து காட்சியளிக்கும்.

ஐப்ரோ போடுவதற்கு முன்:
ஐ ப்ரோ புருவத்தில் போடுவதற்கு முன் வாசலினை தடவிவிட்டு அங்கே ஐ ப்ரோவை போடுங்கள். இதனால் புருவம் அடர்த்தியாக வளரும். ஐ ப்ரோவும் கலையாமல் நீண்ட நேரம் இருக்கும்.

வாசலின் ஸ்க்ரப் :
வாசலினை சிறிது எடுத்து அதனுடன் கடல் உப்பை கலந்து பேஸ்ட் போல்ச் செய்து உடலில் தடவி குளித்தால் சருமம் மென்மையாக இருக்கும். சுருக்கங்கள் வராது.



Click it and Unblock the Notifications











