Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
வெந்தயத்தை எப்படி சரும அழகை மெருகூட்ட பயன்படுத்துவது?
வெந்தயம் ஃப்ளேவினாய்டு, அல்க்லாய்டு, விட்டமின், மினரல் என பல சத்துக்களை பெற்றது. அனிமியா இருப்பவர்கள், அதிக பித்த உடம்பு உள்ளவர்கள் வெந்தய்த்தை கீரையாகவோ, பருப்பாகவோ சாப்பிட்டு வந்தால் ரத்டஹ் விருத்தியாகும். குளிர்ச்சி உண்டாகும்.

வெந்தயம் தலைமுடி வளர்ச்சிக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வாரம் ஒரு நாள் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் பிரச்சனையே இருக்காது.
அது சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை எபப்டி போக்குகிறது என தெரிந்து கொள்ளலாமா?

முகப்பரு :
வெந்தயத்தை 2 ஸ்பூன் எடுத்து ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.நீர் குளிர்ந்ததும், சிறிது முகத்தில் தடவி சில நிமிடங்களுக்கு பிறகு அதே நீரில் கழுவுங்கள். முகப்பருக்களை விரைவில் குணப்படுத்தும்.

நிறம் அதிகரிக்க :
வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அதனுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பேக் போல் போடுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். வெயிலினால் நிறம் மனியிருந்தால் மீண்டும் பழைய நிறம் பெறுவீர்கள்.

சரும அரிப்பிற்கு :
முகப்பரு, கரும்புள்ளி மற்றும் வறண்ட சருமத்தினாலும் அரிப்பு எரிச்சல் உண்டாகும். வெந்தய பேஸ்ட்டை முகத்தில் போட்டால் காய்ங்களையும் சரும பாதிப்புகளையும் விரைவில் ஆற்றிவிடும்.

முதுமை தோற்றத்தை மாற்ற :
சுருக்கம் மற்றும் தளர்ந்த சருமம் இருந்தால், ஊறிய வெந்தயத்துடன் தேன் சேர்த்து அரைத்து முகத்தில் போடுங்கள். முகம் இறுகி இளமையான சருமம் பெறுவீர்கள்.

வறண்ட சருமத்திற்கு :
வெந்தயப் பொடியுடன் சிறிது பால் அல்லது நீர் கலந்து முகத்தில் போட்டு வந்தால், சருமம் ஈரப்பதம் பெற்று மிருதுவாகும்.

அழுக்குகளை அகற்ற :
முகத்திலுள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற வெந்தயப்பொடியுடன் சிறிது நீர் கலந்து முகத்தில் தேய்த்து கழுவவும். முகம் சுத்தமாகி பளிச்சிடும்.



Click it and Unblock the Notifications











