இந்த ஹெர்பல் ஆவி பிடிப்பதால் என்ன பயன் தெரியுமா?

முகத்திற்கு தேவையான போஷாக்கை அளித்தால் முகம் இளமையாகவும், பொலிவாகவும் இருக்கும். ஆவி பிடிப்பதால் அழுக்குகள் வெளியேறி, சருமம் சுவாசிக்கும். முகப்பருக்கள், கிருமிகள் தடுக்கப்படும்.

சருமத்துளைகளின் வழியாக எண்ணற்ற தூசுக்கள் மற்றும் அழுக்குகள், க்ரீம்கள் படிந்திருப்பது நம் கண்ணிற்கு தெரியாது. அவைகள்தான் நமது சுருக்கத்திற்கு காரணம்.

இறந்த செல்கள் வெளியேற முடியாமல் அங்கேயே தங்கி விரைவில் முதுமை தோற்றத்தை தந்துவிடும்.

Herbal steam for removing skin impurities,

அதனால் வறண்ட சருமம் இருப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை, எண்ணெய் சருமம் இருப்பவர்கள் வாரம் ஒருமுறை ஆவி ஆவி பிடித்தால் உங்கள் சருமத்தில் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி, சுத்தமாகவும் இள்மையகவும் இருக்கும். அவ்வாறான ஹெர்பல் ஆவி முறையைப் பற்றி இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தேவையானவை :

தேவையானவை :

நீர்

ரோஜா எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய்

தேயிலை மர எண்ணெய்

சாமந்தி பூ எண்ணெய்

எலுமிச்சை தோல் - துறுவியது.

 செய்முறை :

செய்முறை :

முதலில் சுத்தமான நீரை கொதிக்க வையுங்கள். நன்றாக கொதிக்கும் நிலை வந்தவுடன் அடுப்பை குறைத்து ரோஜா எண்ணெயை 3 துளி விடவும்.

 செய்முறை :

செய்முறை :

அதன் பின் எலுமிச்சை துறுவலை சேர்க்கவும். எலுமிச்சை வாசனை வரும் வரை காத்திருங்கள்.

 செய்முறை :

செய்முறை :

பின்னர் லாவெண்டர் மற்றும் சாமந்தி பூ என்ணெயை 3 துளிகள் மற்றும் தேயிலை மர எண்ணெயை விடவும்.

 செய்முறை :

செய்முறை :

ஒரு நிமிடத்திற்கு பிறகு இந்த நீரை இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி ஆவி பிடிக்க வேண்டும்.

 செய்முறை :

செய்முறை :

அந்த நீரின் சூடு குறையும் வரை ஆவிபிடித்த பின் பருத்தி துண்டினால் முகத்தை ஒத்தி எடுங்கள். பின்னர் மாய்ஸ்ரைஸர் க்ரீன் அல்லது தேங்காய் என்ணெய் தடவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, December 15, 2016, 16:50 [IST]
Desktop Bottom Promotion