Just In
- 23 min ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 5 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 7 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 8 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகள்!
சிலர் முகம் பொலிவோடு இல்லை என்று வருத்தப்படுவார்கள். முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் போதிய தூக்கமின்மை, முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
எனவே உங்கள் முகம் பொலிவோடு இருக்க வேண்டுமானால், சரியான தூக்கத்தை மேற்கொள்வதோடு, முகத்தில் உள்ள இறந்த செல்களை வாரத்திற்கு ஒருமுறையாவது ஃபேஸ் மாஸ்க் போட்டு நீக்க வேண்டும்.
இங்கு முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து உங்கள் முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளுங்கள்.
மைசூர் பருப்பு மற்றும் பால்
மைசூர் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் போட்டு, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி முகம் பொலிவோடு இருக்கும்.
காபி பொடி மற்றும் தேன்
1 டேபிள் ஸ்பூன் காபி பொடியை எடுத்து அத்துடன் 1 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ஓட்ஸ் மற்றும் தயிர்
முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க, 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முகப்பொலிவு மேம்படும்.
முல்தானி மெட்டி மற்றும் கிளிசரின்
1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும்.
கடலை மாவு மற்றும் சர்க்கரை
1 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின் உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் முகப்பொலிவு அதிகரித்திருப்பதைக் காணலாம்.
குறிப்பு
முகத்திற்கு எப்போது ஃபேஸ் பேக் போட்டாலும், அதனை நீரில் கழுவிய பின் சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், ஃபேஸ் பேக்கின் முழு பலனைப் பெற முடியாது.