Just In
- 1 hr ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 1 hr ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 2 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 2 hrs ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
Don't Miss
- Sports டி20 உலக கோப்பை 2024- இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான்.. தேர்வுக்குழுக்கு சூப்பர் யோசனை
- News இவிஎம் இயந்திரத்தின் சோர்ஸ் கோட்.. அதெல்லாம் வெளியிட கோர முடியாது! உச்சநீதிமன்றம் கறார்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடர்த்தியான புருவத்தை தரும் கற்றாழை சீரம்!!
பெண்களுக்கு அடர்த்தியான புருவமும், பெரிய இமைகளை கொண்ட கண்களும் மிக அழகான ஒரு தோற்றத்தை தரும். புருவமே இல்லாமல் பெரிய கண்களுடன் இருந்தால் அழகு கொஞ்சம் குறைந்துதானிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
நிறைய பேருக்கு, பிறந்தது முதலே புருவங்கள் சரிவர வளர்ச்சி இருக்காது. அதற்காக அப்படியே விட வேண்டுமென்பதில்லை. போதிய பராமரிப்பு கொடுத்தால் நிச்சயம் மற்றவர்களைப் போல உங்களுக்கும் அடர்த்தியான வில் போன்ற புருவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை
அப்படியொரு குறிப்பு இங்கே தரப்பட்டுள்ளது. உபயோகித்து பாருங்கள். பின்னர் உங்கள் பலனை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
தேவையானவை :
விளக்கெண்ணெய்
-
அரை
டீஸ்பூன்
விட்டமின்
ஈ
எண்ணெய்
-
2
கேப்ஸ்யூல்,
சோற்றுக்
கற்றாழை
சதைப்பற்று-
1
டேபிள்
ஸ்பூன்
வாசலின்
-
1
டேபிள்
ஸ்பூன்
விளக்கெண்ணெய் புருவத்தில் முடி வளர்ச்சியை தூண்டும். விட்டமின் ஈ மற்றும் வாசலின் அங்கே ஈரப்பதம் அளித்து, சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மிருதுவாக்கும். சோற்று கற்றாழை முடி வளர்ச்சியை தூண்டி புருவத்தை அடர்த்தியாக வளர்ச் செய்யும்.
செய்முறை :
முதலில் விளக்கெண்ணெயில் விட்டமின் ஈ எண்ணெயை கலந்து, பின் சோற்றுக் கற்றாழை மற்றும் வாசலினை சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதனை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த க்ரீமை தினமும் இரவு தூங்குவதற்கு முன், புருவத்திலும் இமையிலும் தடவிவிட்டு தூங்குங்கள். க்ரீமை தடவதற்கு முன் புருவத்தின் முடிகளை லேசாக கிள்ளி விடுங்கள். இதனால் க்ரீம் தடவும் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். எளிதில் உறியப்படும். வளர்ச்சியையும் தூண்டும்.