Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
கோடையில் சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கும் தர்பூசணி!
கோடையில் தர்பூசணி அதிக அளவில் கிடைக்கும். அந்த தர்பூசணியை வாங்கி சாப்பிடுவதோடு, அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், கோடையில் அழகாக ஜொலிக்கலாம். முக்கியமாக தர்பூசணி கொண்டு சருமத்தைப் பராமரித்தால், கோடையில் ஏற்படும் பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஏனெனில் தர்பூசணியில் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது.
மேலும் தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அது சருமத்தில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் கோடையில் சருமத்தில் இருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெயை தடுக்கும். சோர்வுடன் காணப்படும் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும். முக்கியமாக பருக்கள் மற்றும் வெயிலால் சருமம் கருமை அடைவதைத் தடுக்கலாம்.
சரி, இப்போது கோடையில் சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கும் தர்பூசணியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

வெயிலால் பாதிக்கப்பட்ட சருமம்
வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், தர்பூசணி பழத்தின் ஒரு துண்டை வாயில் போட்டுக் கொள்வதோடு, மற்றொரு துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், வெயிலினால் பாதிக்கப்பட்ட சருமம் குளிர்ச்சியடையும்.

பொலிவான சருமம்
தர்பூசணியை அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

சுருக்கமான சருமம்
சருமத்தில் முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்கள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க தர்பூசணி பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் தர்பூசணி பழத்தை அரைத்து, அத்துடன் அவகேடோவை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி, சுருக்கங்கள் மறையும்.

சென்சிடிவ் சருமம்
உங்களுக்கு எண்ணெய் சருமம் அல்லது சென்சிடிவ் சருமம் என்றால், தர்பூசணியை பேஸ்ட் செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் மென்மைத் தன்மை அதிகரிக்கும்.

வறட்சியான சருமம்
வறட்சியான சருமம் உள்ளவர்கள், தர்பூசணி பழத்தினை அரைத்து, அதில் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள வறட்சி நீங்கும்.

சாதாரண சருமம்
தர்பூசணி சாற்றில், கெட்டியான க்ரீம், ஆலிவ் ஆயில் சேர்த்து, அத்துடன் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த ப்ளாக் டீ கொண்டு கழுவ வேண்டும்.

பருக்கள்
பருக்கள் அதிகம் இருந்தால், தர்பூசணியின் விதைகளை அரைத்து, அதனை முகத்தில் தடவி 2 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். பின் முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் பருக்களின் வடுக்கள் மறையும்.



Click it and Unblock the Notifications