சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு தரும் வாழைப்பழம்!

By Maha

வருடம் முழுவதும் மிகவும் விலை குறைவில் கிடைக்கும் பழங்களில் ஒன்று தான் வாழைப்பழம். மேலும் இந்த பழம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட. இத்தகைய வாழைப்பழத்தில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே இதனை உட்கொண்டால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குறிப்பாக வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கொடுப்பதில் வாழைப்பழத்திற்கு இணை எதுவும் கிடையாது.

வயிற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால், அது நமது சருமத்தில் நன்கு புலப்படும். எனவே இந்த வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வருவதோடு, அதனைக் கொண்டு நமது சருமத்தைப் பராமரிக்கவும் வேண்டும். இங்கு சருமத்தைப் பராமரிக்க வாழைப்பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும வறட்சி நீங்க...

சரும வறட்சி நீங்க...

நன்கு கனிந்த வாழைப்பழத்தில் பாதியை மசித்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வறட்சி நீங்கும்.

பொலிவான சருமம் பெற...

பொலிவான சருமம் பெற...

சருமம் பொலிவிழந்த காணப்பட்டால், மசித்த வாழைப்பழத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி மாஸ்க் போட்டால், சருமம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.

கரும்புள்ளிகள் நீங்க...

கரும்புள்ளிகள் நீங்க...

மசித்த வாழைப்பழத்துடன், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

சொரசொரப்பான சருமம் நீங்க...

சொரசொரப்பான சருமம் நீங்க...

வாழைப்பழத்தை மசித்து, அதில் சர்க்கரை சேர்த்து, அதனைக் கொண்டு முகத்தை வட்ட வடிவில் ஸ்கரப் செய்து, முகத்தை கழுவ வேண்டும். இதன் மூலம் இறந்த செல்களால் சருமத்தில் ஏற்பட்ட சொரசொரப்பு நீங்கி, சருமம் மென்மையாகவும், வறட்சியடையாமலும் இருக்கும்.

முதுமை தோற்றத்தைத் தடுக்க...

முதுமை தோற்றத்தைத் தடுக்க...

மசித்த வாழைப்பழத்துடன், சிறிது அவகேடோவை மசித்து சேர்த்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உற வைத்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் முதுமைத் தோற்றம் தடுக்கப்படும்.

வீக்கமடைந்த கண்களுக்கு...

வீக்கமடைந்த கண்களுக்கு...

காலையில் எழுந்த பின் உங்கள் கண்கள் வீங்கியுள்ளதா? அப்படியெனில் வீட்டில் வாழைப்பழம் இருந்தால், அதனை மசித்து, கண்களின் மேல் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் உடனே குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion