Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும்
சரும சுருக்கத்தைப் போக்கும் கற்றாழை!!!
வயது அதிகரித்தால், சருமத்தில் சுருக்கமும் அதிகரிப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால் இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர் பலருக்கு விரைவிலேயே சருமத்தில் சுருக்கங்களானது ஏற்படுகிறது. இதனால் இளமையிலேயே முதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். மேலம் இதற்காக பல்வேறு க்ரீம்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
இருப்பினும் அவற்றினால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை, மாறாக சருமத்தின் இயற்கை அழகு தான் பாதிக்கப்படுகிறது. எனவே சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டால், அதனைப் போக்க இயற்கை நமக்கு தந்த ஒரு அற்புதமான ஒரு பொருள் தான் கற்றாழை. கற்றாழையினால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மட்டுமின்றி, பல்வேறு பிரச்சனைகளும் நீங்கும். இங்கு கற்றாழையை சருமத்திற்கு பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.

மென்மையான சருமம்
கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு தினமும் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் கிடைத்து, சருமத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்.

பொலிவான சருமம்
கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அவை சருமத் துளைகளில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.

சிறந்த மாய்ஸ்சுரைசர்
கற்றாழை ஜெல்லை சிறந்த மாய்ஸ்சுரைசர் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதனை சருமத்திற்கு அன்றாடம் பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். இதனால் சருமம் அழகாக மின்னும்.

சுருக்கங்கள்
தினமும் இரவில் படுக்கும் போது, கற்றாழை ஜெல்லை முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி வந்தால், சருமத்திற்கு தேவையான வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் சி போன்றவை கிடைத்து, சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கலாம். முக்கியமாக கண்களைச் சுற்றி தடவும் போது, கற்றாழையின் ஜெல் கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவை கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

முதுமையைத் தடுக்கும்
1:1 என்ற விகிதத்தில் கற்றாழை ஜெல் மற்றும் நீரில் கலந்த போராக்ஸ் நீரை எடுத்துக் கொண்டு, நன்கு கொதிக்க விட்டு, பின் குளிர வைத்து, அத்துடன் 1 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, பின் அந்த கலவையை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அவை சுருக்கத்தையும், விரைவில் முதுமை தோற்றம் வருவதையும் தடுக்கும்.



Click it and Unblock the Notifications