Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
இளமையா இருக்கணுமா நத்தை மசாஜ் செய்யுங்களேன்!

மூன்று நாடுகளுக்கு இடையே போட்டி
மசாஜ் செய்வதற்கு, எந்தப் பொருளை பயன்படுத்துவது என்பதில் தான், இப்போது சீனா, ஜப்பான், ரஷ்யா நாடுகளுக்கு இடையே, தற்போது கடும் போட்டி நிலவுகிறது. சீனா, ஜப்பான், ரஷ்யாவைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் நத்தை மசாஜ் கலாசாரம் அடி எடுத்து வைத்துள்ளது.
முகத்தில் நத்தை கையில் காசு
பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள அழகு நிலையங்களில் சிறிய அளவிலான நத்தைகளை, முகத்தில் விட்டு, மசாஜ் செய்கின்றனர். ரஷ்யாவின் கிராசனோயக்ஷா நகரில், ‘நத்தை மசாஜ் கிளப்' உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை, படுக்க வைத்து, அவர்களின் முகங்களில், சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர். அந்த நத்தைகளும், மூக்கு, கன்னம், கண், நெற்றி என, வீதி உலா போவது போல், முக உலா போகின்றன. இந்த நத்தை மசாஜ் செய்வதற்காக, வாடிக்கையாளர்களிடம், கணிசமான ஒரு தொகையையும் கறந்து விடுகின்றனர்.
இந்த நத்தை மசாஜால், முகத்தில் உள்ள தோல்கள் புத்துயிர் பெறுகின்றன. முகச் சுருக்கங்கள், முகத்தில் நீண்ட நாள் வடுக்கள், தழும்புகள் ஆகியவை மறைந்து, முகம் புதுப் பொலிவு பெறுகிறது என்கின்றனர், இந்த கிளப்பை நடத்துவோர்.
எகிப்தில் தொடங்கிய மசாஜ்
இந்த நத்தை மசாஜ் கலாச்சாரம் கி.பி 16ம் நூற்றாண்டில் எகிப்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் படிப்படியாக முக்கிய நாடுகளுக்குப் பரவி இப்போது இந்தியாவில் அடிஎடுத்து வைத்துள்ளது. ராய்பூரில் உள்ள இந்திரா காந்தி க்ரிஷி வைத்தியசாலாவில் இந்த நத்தை மசாஜ் சிகிச்சை செய்யப்படுகிறது. இங்கு ஆப்ரிக்க காடுகளில் உள்ள நத்தைகளைக் கொண்டு செய்யப்படும் மசாஜ் மூலம் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு மனஅழுத்தமும் சரியாகிறதாம்.



Click it and Unblock the Notifications