Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
இளமையா இருக்கணுமா நத்தை மசாஜ் செய்யுங்களேன்!

மூன்று நாடுகளுக்கு இடையே போட்டி
மசாஜ் செய்வதற்கு, எந்தப் பொருளை பயன்படுத்துவது என்பதில் தான், இப்போது சீனா, ஜப்பான், ரஷ்யா நாடுகளுக்கு இடையே, தற்போது கடும் போட்டி நிலவுகிறது. சீனா, ஜப்பான், ரஷ்யாவைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் நத்தை மசாஜ் கலாசாரம் அடி எடுத்து வைத்துள்ளது.
முகத்தில் நத்தை கையில் காசு
பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள அழகு நிலையங்களில் சிறிய அளவிலான நத்தைகளை, முகத்தில் விட்டு, மசாஜ் செய்கின்றனர். ரஷ்யாவின் கிராசனோயக்ஷா நகரில், ‘நத்தை மசாஜ் கிளப்' உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை, படுக்க வைத்து, அவர்களின் முகங்களில், சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர். அந்த நத்தைகளும், மூக்கு, கன்னம், கண், நெற்றி என, வீதி உலா போவது போல், முக உலா போகின்றன. இந்த நத்தை மசாஜ் செய்வதற்காக, வாடிக்கையாளர்களிடம், கணிசமான ஒரு தொகையையும் கறந்து விடுகின்றனர்.
இந்த நத்தை மசாஜால், முகத்தில் உள்ள தோல்கள் புத்துயிர் பெறுகின்றன. முகச் சுருக்கங்கள், முகத்தில் நீண்ட நாள் வடுக்கள், தழும்புகள் ஆகியவை மறைந்து, முகம் புதுப் பொலிவு பெறுகிறது என்கின்றனர், இந்த கிளப்பை நடத்துவோர்.
எகிப்தில் தொடங்கிய மசாஜ்
இந்த நத்தை மசாஜ் கலாச்சாரம் கி.பி 16ம் நூற்றாண்டில் எகிப்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் படிப்படியாக முக்கிய நாடுகளுக்குப் பரவி இப்போது இந்தியாவில் அடிஎடுத்து வைத்துள்ளது. ராய்பூரில் உள்ள இந்திரா காந்தி க்ரிஷி வைத்தியசாலாவில் இந்த நத்தை மசாஜ் சிகிச்சை செய்யப்படுகிறது. இங்கு ஆப்ரிக்க காடுகளில் உள்ள நத்தைகளைக் கொண்டு செய்யப்படும் மசாஜ் மூலம் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு மனஅழுத்தமும் சரியாகிறதாம்.



Click it and Unblock the Notifications











