Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
இளமையா இருக்கணுமா நத்தை மசாஜ் செய்யுங்களேன்!

மூன்று நாடுகளுக்கு இடையே போட்டி
மசாஜ் செய்வதற்கு, எந்தப் பொருளை பயன்படுத்துவது என்பதில் தான், இப்போது சீனா, ஜப்பான், ரஷ்யா நாடுகளுக்கு இடையே, தற்போது கடும் போட்டி நிலவுகிறது. சீனா, ஜப்பான், ரஷ்யாவைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் நத்தை மசாஜ் கலாசாரம் அடி எடுத்து வைத்துள்ளது.
முகத்தில் நத்தை கையில் காசு
பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள அழகு நிலையங்களில் சிறிய அளவிலான நத்தைகளை, முகத்தில் விட்டு, மசாஜ் செய்கின்றனர். ரஷ்யாவின் கிராசனோயக்ஷா நகரில், ‘நத்தை மசாஜ் கிளப்' உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை, படுக்க வைத்து, அவர்களின் முகங்களில், சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர். அந்த நத்தைகளும், மூக்கு, கன்னம், கண், நெற்றி என, வீதி உலா போவது போல், முக உலா போகின்றன. இந்த நத்தை மசாஜ் செய்வதற்காக, வாடிக்கையாளர்களிடம், கணிசமான ஒரு தொகையையும் கறந்து விடுகின்றனர்.
இந்த நத்தை மசாஜால், முகத்தில் உள்ள தோல்கள் புத்துயிர் பெறுகின்றன. முகச் சுருக்கங்கள், முகத்தில் நீண்ட நாள் வடுக்கள், தழும்புகள் ஆகியவை மறைந்து, முகம் புதுப் பொலிவு பெறுகிறது என்கின்றனர், இந்த கிளப்பை நடத்துவோர்.
எகிப்தில் தொடங்கிய மசாஜ்
இந்த நத்தை மசாஜ் கலாச்சாரம் கி.பி 16ம் நூற்றாண்டில் எகிப்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் படிப்படியாக முக்கிய நாடுகளுக்குப் பரவி இப்போது இந்தியாவில் அடிஎடுத்து வைத்துள்ளது. ராய்பூரில் உள்ள இந்திரா காந்தி க்ரிஷி வைத்தியசாலாவில் இந்த நத்தை மசாஜ் சிகிச்சை செய்யப்படுகிறது. இங்கு ஆப்ரிக்க காடுகளில் உள்ள நத்தைகளைக் கொண்டு செய்யப்படும் மசாஜ் மூலம் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு மனஅழுத்தமும் சரியாகிறதாம்.



Click it and Unblock the Notifications











