Latest Updates
-
வெயிலால் கருப்பாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது... -
பீட்ரூட்டை இந்த ஸ்டைலில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
Aani Amavasya 2026: ஆனி அமாவாசையான இன்று இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த கஞ்சியை வாரம் 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகருக்கும் நல்லது.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்கப்போகுதாம் -
ஜூலை 16-ல் சூரிய-சந்திரனின் பரிவர்த்தன யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
ஜூலை 16-ல் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
முருங்கைக்காய் பாயா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - ஆட்டுக்கால் பாயாவை விட சூப்பரா இருக்கும்
Skin Care Tips: அந்தகால மகாராணிகள் பயன்படுத்திய வினோதமான அழகு குறிப்புகள் - நீங்களும் ட்ரை பண்ணுங்க
Skin care tips: தற்போது மேக்கப் மற்றும் சரும ஆரோக்கியத்தை பராமரிப்பது என்பது உலகளவில் மிகப்பெரிய சந்தையாக மாறிவருகிறது. பெண்களை அழகுப்படுத்தஒவ்வொரு நாளும் ஒரு புது மேக்கப் ட்ரெண்ட் உருவாகி வருகிறது. ஆனால் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளவும், சருமத்தை மேம்படுத்தவும் என்ன செய்திருப்பார்கள் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?
பண்டைய நாகரிகங்கள் பெரும்பாலும் சரும பராமரிப்பிற்கு வீட்டு வைத்தியங்களையே பெரிதும் சார்ந்திருந்தன. முன்னோர்கள் கட்டிப்பிடித்த இந்த வீட்டு வைத்தியங்களும், அழகுக் குறிப்புகளும் கேட்பதற்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றலாம்; ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, அவை உண்மையில் பலனளித்தன.

இன்றைய அழகு சிகிச்சைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த வழக்கத்திற்கு மாறான சடங்குகள், இன்றும் பயன்பாட்டில் உள்ள இயற்கை மூலப்பொருட்களையே மையமாகக் கொண்டிருந்தன, ஆனால், அந்த பொருட்கள் தற்போது முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பதில் நம் முன்னோர்கள் பின்பற்றிய சில விசித்திரமான அழகு குறிப்புகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
நத்தையின் சளியை முகத்தில் பயன்படுத்துவது
இது கேட்பதற்கே மிகவும் வினோதமாக இருக்கலாம். ஆனால் உண்மையில், நத்தையின் சளி உண்மையில் பல நூற்றாண்டுகளாகவே முகப் பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தற்போது உலகளாவிய ஒரு பிரபல ட்ரெண்டாக மாறிவருகிறது. ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் இது 'சீரம்' வடிவில் கிடைக்கிறது; இது பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். கடந்த களங்களில், பெண்கள் நத்தைகளைத் தங்கள் முகத்தின் மீது நேரடியாக ஊர்ந்து செல்ல அனுமதிக்கும் வழியைப் பின்பற்றி வந்தனர். இந்த நத்தை சளியில் பெப்டைடுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஹையலுரோனிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ளன; இவை சருமத்தைப் பாதுகாப்பதோடு, சருமத்திற்குத் தீவிரமான ஈரப்பதத்தையும் அளித்து, விரைவில் வயதாவதைத் தடுக்கின்றன.
விலங்குகளின் கழிவுகள் உடல் மற்றும் முகத்தில் பூசப்பட்டன
பண்டைய காலத்து அழகுக்கலை குறிப்புகள் பெரும்பாலும் சுகாதாரமானதாகவோ, கவர்ச்சிகரமானதாகவே இருந்ததில்லை. ஏனெனில், சில கலாச்சாரங்களில், விலங்குகளிலிருந்து பெறப்பட்ட பல பொருட்கள், விலங்குகளின் கழிவுகள் உட்பட சரும பராமரிப்பு நடைமுறைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன. முதலை மற்றும் பசுவின் சாணத்திலிருந்து தொடங்கி, ஆடு மற்றும் ஒட்டகத்தின் பால் வரை, பல்வேறு பொருட்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கவும், இறந்த செல்களை நீக்கவும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக தற்போதைய காலகட்டத்தில் அழகு சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் ஒரே விலங்கு சார்ந்த பொருள் பால் மட்டுமே.
தேன்
தேன் தற்போதும் பல்வேறு அழகு சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த காலத்தில் தேன் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. 15,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தேன், நேரடியாக முகத்தில் பூசப்பட்டதுடன், அதன் ஈரப்பதமூட்டும், குணப்படுத்தும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இந்த அழகுக் குறிப்பு, தெளிவான மற்றும் ஈரப்பதமான சருமத்தை அளித்தது. ஆனால், பண்டைய உலகை சேர்ந்தவர்கள் காயங்களின் மீதும் தேனைப் பூசி வந்தனர். அதன் பிசுபிசுப்புத் தன்மை காயங்களைத் துடைப்பதை கடினமாக்கியத்துடன், கூடுதல் வலியையும் ஏற்படுத்தியது. ஆனால், அதிலுள்ள நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளால், அது காயங்களை நன்றாக குணப்படுத்துகிறது.
ஆட்டின் வியர்வை
ரோமானிய மக்கள், ஆட்டு ரோமத்திலிருந்து பெறப்பட்ட 'லானோலின்' எனும் பொருளை, இரவு நேரங்களில் பயன்படுத்தும் ஒரு ஈரப்பதமூட்டியாகப் பயன்படுத்தி வந்தனர். லானோலின் சருமத்தின் பாதுகாப்பு அரணை வலுப்படுத்தி, ஆழமான ஈரப்பதத்தை வழங்கியதோடு, சருமத்தை மென்மையாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவியது. இதன் வாசனை அவ்வளவு இனிமையானதாக இல்லாவிட்டாலும், சருமத்தின் ஈரப்பதம் வெளியேறாமல் தக்கவைத்துக்கொள்வதிலும், சருமத்தைப் பாதுகாப்பதிலும் சிறப்பாக செயல்பட்டது. ஆச்சரியமளிக்கும் விதமாக இன்றும் உதட்டுப் பூச்சுகளிலும், ஈரப்பதமூட்டிகளிலும் லானோலின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பால் குளியல்
எகிப்து பேரரசி கிளியோபாட்ராவின் அழகும், வசீகரமும் உலகப்புகழ் பெற்றது. அவர் நீருக்குப் பதிலாகத் தூய பாலில் குளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இது அவரது சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பொலிவுடனும் வைத்திருக்க உதவியது. பாலில் 'லாக்டிக் அமிலம்' நிறைந்துள்ளது, இது ஒரு இயற்கையான சரும பாதுகாப்பாளராக செயல்பட்டு, இறந்த சரும செல்களை நீக்குகிறது. இதன் மூலம், சருமத்தின் அடியில் மறைந்திருக்கும் புத்துணர்ச்சியான சருமம் வெளிப்படுகிறது. காலப்போக்கில், இது மிளிரும் பொலிவை வழங்குகிறது.



Click it and Unblock the Notifications
