புத்தாண்டு தினத்தன்று அழகா பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை 2 நாள் தொடர்ந்து போடுங்க..

New Year 2025 Skin Care Tips In Tamil: இன்னும் சில நாட்களில் 2025 புத்தாண்டில் நுழையவுள்ளோம். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடும் வகையில் பலரும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக நேரத்தை செலவிடுவார்கள். சிலர் குட்டி பார்ட்டியை கூட ஏற்பாடு செய்வார்கள். இப்படியான சூழ்நிலையில் அழகாக இருக்க வேண்டுமென்று நிறைய பேர் அழகு நிலையங்களுக்கு செல்வார்கள்.

ஆனால் சிலருக்கு அழகு நிலையங்களுக்கு செல்ல கூட நேரம் இருக்காது. இப்படிப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தாலே, புத்தாண்டு தினத்தன்று பளிச்சென்று ஜொலிக்கலாம். இப்போது புத்தாண்டு தினத்தன்று அழகாக ஜொலிக்க உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

New Year 2025 Try These DIY Face Packs To Get Glowing Skin

தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. அதே போல் தேனில் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. இவ்விரண்டையும் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் முழுமையாக அகற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று இருக்கும். இந்த ஃபேஸ் பேக் போடுவதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளன. இந்த மஞ்சளையும் தயிரையும் ஒன்றாக கலந்து ஃபேஸ் பேக் போட்டால், முகத்தில் உள்ள பருக்களால் ஏற்பட்ட கறைகள் நீங்கும் மற்றும் முகம் பளிச்சென்று பிரகாசிக்கும். இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஆகிய இரண்டுமே சருமத்தின் ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த பல ஆண்டுகளாக சரும பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கற்றாழையின் ஜெல்லை 2 டீஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை போடுவதன் மூலம், முகம் பிரகாசமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, December 30, 2024, 22:52 [IST]
Desktop Bottom Promotion