Latest Updates
-
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை
காட்டன் டிரஸ்சில் கோடையில் கலக்குங்க!

ஒல்லி ஒல்லி அழகு
நூலிடைப் பெண்கள் காட்டன் புடவைக் கட்டினால் அப்படியே பூசினார்போல அழகு கூடும். அதற்காக குண்டாய் இருப்பவர்கள் காட்டன் புடவை கட்டக்கூடாது என்றில்லை. மொட, மொடப்பு அதிகம் இல்லாத நாராயண்பேட் காட்டன், பேட்டேரு காட்டன், பொபிலி காட்டன் போன்ற புடவைகளை கட்டலாம்.
எளிமையான அழகு
காட்டன் புடவைகள் நூறு ரூபாயில் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய் வரை கூட தரத்தைப் பொருத்து கிடைக்கின்றன. இவை சிம்பிளாக அதே சமயத்தில் அழகாக இருக்கும். சாதாரணமாய் இருப்பவர்கள் கூட காட்டன் புடவை கட்டினால் கம்பீரமாய் காட்சியளிப்பர். சிம்பிளாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கத்வால் காட்டன் ஏற்றது. அதேசமயம் வயதானவர்களுக்கு ஜரிகை வச்ச வெங்கடகிரி காட்டன் புடவை சின்னப் பொண்ணுங்களுக்கு சூப்பர் நெட்டும், தனேகலியும் அழகாக இருக்கும்.
காட்டன் சுடிதார்
பெரிய பொம்மை டிசைன் போட்ட காட்டன் சல்வார்தான் இப்ப காலேஜ் பொண்ணுங்க மத்தியில் ஃபேஷன். அதேபோல் காட்டன் ஸ்கட், டாப்ஸ் போட்டால் கல்லூரி பெண்களுக்கு கலக்கலாய் இருக்கும். கோடைக்கும் இதமாய் இருக்கும்.
எப்படி பராமரிக்கலாம்
காட்டன் துணிகளை பராமரிப்பது எளிதானதல்ல. சரியாக பராமரித்தால் மட்டுமே அவை நீண்ட நாட்கள் நீடித்து உழைக்கும்.
காட்டன் துணிகளை கைகளால் துவைப்பது தான் மிகவும் நல்லது. புது காட்டன் புடவையை முதல் முறை துவைக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீர்ல கொஞ்சமா கல் உப்பு சேர்த்து பத்து நிமிஷம் ஊற வைத்து அலசினால் புடவையோட புது மெருகு அப்படியே இருக்கும். பூந்திக் கொட்டை சேர்த்த தண்ணீரில் ஊற வைத்து அலசினாலும், பளபளப்பு மங்காமல் புதுசு போல் இருக்கும்.



Click it and Unblock the Notifications