Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
கரும்புள்ளியால உங்க முகம் பார்க்க அசிங்கமா இருக்கா? அப்ப இந்த சமையலறை பொருட்கள யூஸ் பண்ணுங்க!
முகப்பரு, கரும்புள்ளி மற்றும் கருமை நிற திட்டுகள் போன்றவை உங்கள் முக அழகை தோற்றத்தை அசிங்கமாக மாற்றுகிறது. எந்த சரும பிரச்சனையும் இல்லாத அழகான பொலிவான சருமத்தை பெறதான் நாம் அனைவரும் விரும்புவோம்.
சுட்டெரிக்கும் வெப்பம், ஹார்மோன் மாற்றங்கள், வயதான அல்லது தோல் பிரச்சினைகள் போன்றவை கரும்புள்ளிகள் மற்றும் திட்டுகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். ஹைப்பர் பிக்மென்டேஷன் என்று அழைக்கப்படும் கரும்புள்ளிகளை வீட்டு வைத்தியம் மூலம் உடனடியாக சரிசெய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், அந்த வகையில், தினசரி அடிப்படையில் சில வீட்டு வைத்தியங்களை மேற்பூச்சாகப் பயன்படுத்துவது கரும்புள்ளிகளை ஒளிரச் செய்வதிலும் சீரற்ற நிறமியைக் குறைப்பதிலும் சில நேர்மறையான முடிவுகளைத் தரும். உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்க உதவும் சில பழைய வைத்தியங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
அரிசி நீர்
உங்க சருமத்தில் புளித்த அரிசி நீரைப் பயன்படுத்துவது கரும்புள்ளிகள், தோல் பதனிடுதல் மற்றும் சீரற்ற நிறமி ஆகியவற்றைக் குறைக்க உதவும். ஆய்வுகளின்படி, புளிக்கவைக்கப்பட்ட அரிசி கலவையில் உள்ள தாதுக்கள் தோல் செல்களின் டைரோசினேஸ் செயல்பாட்டைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளன. அவை தோல் நிறமாற்றத்திற்கு முக்கிய காரணமாகின்றன. இது தோலில் மெலனின் உற்பத்தியை சமநிலைப்படுத்துகிறது.
அரிசியை ஊறவைத்து கழுவி, பின்னர் 2-3 நாட்களுக்கு ஒரு கண்ணாடி குடுவையில் அந்த நீரைச் சேர்த்து, அதன் செயல்திறனை அதிகரிக்க ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெயையும் அதில் சேர்க்கலாம். அதன் பின்னர், உங்கள் சருமத்தில் புளித்த அரிசி நீரை பயன்படுத்தலாம்.
எலுமிச்சை சாறு
கரும்புள்ளிகளின் தாக்கத்தை குறைப்பதற்கான மற்றொரு சக்திவாய்ந்த வழி, எலுமிச்சை சாற்றை சருமத்தில் தடவுவது. எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், சருமத்திற்கு இயற்கையான ப்ளீச் ஆகவும், நிறமியைக் குறைக்கவும் உதவுகிறது. உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் எலுமிச்சை சாற்றை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் இது சில சந்தர்ப்பங்களில் தோல் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த மருந்தின் செயல்திறனை அதிகரிக்க, தேன் மற்றும் தக்காளி சாறுடன் எலுமிச்சை சாற்றை கலந்து ஃபேஸ் மாஸ்க்காக தடவி, தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதற்கான பலனை நீங்களே காணலாம்.
அலோ வேரா ஜெல்
கரும்புள்ளிகளை சரிசெய்வதற்கான மற்றொரு எளிய தீர்வு கற்றாழை ஜெல்லை தோலில் தடவுவது. புதிய கற்றாழை ஜெல்லில் அலோயின் என்ற கலவை இருப்பதால் கரும்புள்ளிகளைக் குறைப்பதாகவும், சருமத்தை ஒளிரச் செய்வதற்கும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி, புதிய கற்றாழை ஜெல்லை ஒரு இரவு முழுவதும் முகத்தில் தடவி, மறுநாள் காலையில் முகத்தை கழுவ வேண்டும்.
மஞ்சள்
காலங்காலமாக, மஞ்சள் நிறமியைக் குறைப்பதற்கும் சருமத்தை பிரகாசமாக்குவதற்கும் வீட்டு வைத்தியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் தூளை பால் அல்லது தேனுடன் கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகளுக்கு தடவுவது மஞ்சளைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி. முகத்தை கழுவுவதற்கு முன் 20 நிமிடங்கள் சருமத்தில் ஃபேஸ்ட்டை அப்படியே விட்டு விடுங்கள்.
இந்த தீர்வை வாரத்திற்கு சில முறை செய்யவும். கரும்புள்ளிகள் மறைவதற்கு மஞ்சள் நல்லது என்பதற்கான காரணம், ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு காரணமான நிறமியான மெலனின் உற்பத்தியைத் தடுக்கிறது.
தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது இயற்கையாகவே சரும பளபளப்பை அதிகரிக்கிறது மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் மறைவதற்கு உதவுகிறது. மேலும் தக்காளி சாற்றில் கரும்புள்ளிகளை குறைக்க உதவும் இயற்கையான ப்ளீச்சிங் கலவைகள் உள்ளன.
ஒரு தக்காளியை துண்டுகளாக நறுக்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக தேய்க்கவும். 10-15 நிமிடங்கள் கழித்து, தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த மருந்தின் செயல்திறனை அதிகரிக்க, தக்காளி கூழுடன் உளுத்தம் பருப்பு மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து நீங்கள் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
