Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
இந்த 6 விஷயங்களை சரியாக செய்தால் உங்கள் கைக்கு இப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும்..!
மற்றவர்களுக்காக அழகுடன் இருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஆனால், நமக்கு பிடித்த மாதிரியான அழகுடன் இருத்தல் அவசியம். சிலருக்கு முக அழகு மிக முக்கியமானதாக இருக்க கூடும். சிலருக்கு உடல் அழகு இன்றியமையாததாகும். உடல் அழகில் கை, கால்களும் அடங்கும்.

கை கால்கள் அழகுடன் இருக்க வேண்டும் என்கிற விருப்பம் பலருக்கு இருக்கும். முக்கியமாக கைகளை மிருதுவாகவும், இளமையாகவும் வைத்து கொள்ள வேண்டும் என பலர் ஆசைப்படுவர். இதனை நிறைவேற்ற பல வழிகள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான 6 வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஈரப்பதம்
கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம்.
இல்லையேல் தினமும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை கைகளில் தடவி மென்மையாக வைத்து கொள்ளலாம்.

அழுக்குகளை அகற்ற
கைகளில் உள்ள அழுக்குகளை அகற்றினாலே கைகள் மிகவும் மிருதுவாகவும் இளமையாகவும் மாற கூடும். இதற்கு தேவையானவை...
மஞ்சள் கரு 1
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
அவகேடோ பழம் பாதி

தயாரிப்பு முறை
முதலில் அவகேடோ பழத்தை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இந்த கலவையை கைகளில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கைகளை கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் கைகள் இளமையாகவே இருக்கும்.

பட்டு போன்ற கைகள்
கைகளை தொட்டாலே பட்டு போன்ற உணர்வு ஏற்பட வேண்டுமா? அதற்கு எளிய வழி இது தான். ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கைகளில் தடவினால் கைகள் பட்டு போன்று மிருதுவாக இருக்கும். மேலும், உங்களின் கைகளை அழகாகவும் மாற்றும்.

வெண்மை பெற
கைகள் மிகவும் வெண்மையாக இருக்க சிட்ரஸ் வகை பழங்களே போதும். சிட்ரஸ் வகை பழங்களை சாப்பிட்டு வந்தாலே பலவித பயன்கள் உங்களுக்கு கிடைக்கும். மேலும், இவற்றை கைகளில் எண்ணெய்யுடன் சேர்த்தும் தடவலாம்.

இளமையான கைகளுக்கு
கைகளை இளமையாக வைக்க பல வழிகள் உள்ளது. அவற்றில் இந்த வழி மிகவும் பிரமாதமானது. இதற்கு தேவையானவை...
பால் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை
முதலில் எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பாலை சேர்த்து கைகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் கைகள் இளமையாக இருக்கும்.
மேற்சொன்ன வழிகளை தொடர்ந்து செய்து வந்தாலே நல்ல பலனை அடையலாம்.



Click it and Unblock the Notifications











