Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்
இனி குளிக்கற சோப்பை கடையில வாங்காதீங்க... மீந்துபோன கேரட்டை வெச்சு வீட்லயே சோப்பு செஞ்சிக்கலாம்...
கேரட்டை வைத்து வீட்டிலேயே எப்படி சுத்தமான சோப்பு தயாரிக்கலாம் என்பது பற்றிய செய்முறை இங்கே விளக்கப்பட்டுள்ளது.
கேரட் சோப் பெரும்பாலும் அதன் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பண்புகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கட்டுரையில், நீங்களே சொந்தமாக உங்களுக்கான கேரட் சோப்பை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றிச் சொல்கிறோம் வாருங்கள்.
நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம் "ஏன் கேரட் சோப்?" ஆமாம், கேரட் சோப் உங்கள் தோலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பல பண்புகளைக் கொண்டுள்ளன.

சருமப் பராமரிப்பு
கேரட் சோப்பால் உங்கள் தோலுக்கு கிடைக்கும் அனைத்து நன்மைகள் மற்றும் அதை எப்படி எளிதாக உருவாக்குவது என்பதையும் அறிந்து கொண்டால், உடனே உங்களுக்கான சோப்பை உருவாக்க விரைவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அது மட்டுமல்ல, வீட்டு முறைத் தயாரிப்பு உங்கள் குளியலறை அல்லது வீட்டிற்கும் நன்மை பயக்கும்.

கேரட்டின் நன்மைகள்:
கேரட் உங்கள் தோலுக்கு மிகவும் ஆரோக்கியமளிக்கும். கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகள் இங்கே உங்களுக்காக,
இதன் அதிக வைட்டமின் "ஏ" உள்ளடக்கம் சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின் "ஏ" என்பது இயல்பான ஆன்டி ஆக்ஸிடன்ட், அது வயது முதிர்ச்சியை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்சைத் தாக்குகிறது.
வைட்டமின் "சி" உங்கள் தோலுக்கு ஆரோக்கியமான பளபளப்பைத் தருகிறது.
சருமத்தின் நெகிழ்ச்சிக்குத் தேவையான முக்கியமான கூறு "கொலாஜன்" உற்பத்தியைத் தூண்டுகிறது.
"பொட்டாசியம்" உங்கள் தோலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
"ஆன்டிஆக்ஸிடன்ட்" வைட்டமின் "ஏ" குறைபாடு காரணமாக ஏற்படும் முகப்பரு, தோல் நோய், பருக்கள் மற்றும் எந்தவொரு சரும நிலைக்கும் சிகிச்சையளிக்க உதவுகின்றன.
"பீட்டா கரோட்டின்" சருமத்தை சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

கேரட் சோப்பின் நன்மைகள்
மேலுள்ள ஊட்டச்சத்துப் பண்புகள் அனைத்தையும் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தோலுக்கு சிறந்த நன்மைகளை நீங்கள் பெறலாம். இந்த வழியில், தோலானது எபிதெலியல் செல்கள் மூலமாக அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதால் இவை மிகவும் பயனுள்ளதாக அமைகிறது,
கேரட் சோப்பைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் வேறு பல நன்மைகள் இதோ,
• சிரங்கை கட்டுப்படுத்த உதவுகிறது.
• உங்கள் தோலை மென்மை மற்றும் வளவளப்பாக மாற்றுகிறது.
• சென்சிடிவ் தோலமைப்பைக் கொண்ட மக்களுக்குச் சிறந்தது.
• பாலூட்டுவதால் வெடிக்கும் மார்புக் காம்புகளுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
• காயங்களைக் குணப்படுத்துவதை மேம்படுத்துகிறது.

கேரட் சோப்பின் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
• நீர்
• 4 கேரட் (60 கிராம்)
• 1 டீஸ்பூன் உப்பு (5 கிராம்)
• 1 கப் காஸ்டிக் சோடா (112 கிராம்)
• 2 கப் ஆலிவ் எண்ணெய் (400 மிலி)
• 1/2 கப் ஆமணக்கு எண்ணெய் (100 மிலி)
• 3 கப் தேங்காய் எண்ணெய் (300 மிலி)
• 25-30 சொட்டு யலங் யலங் எசன்ஷியல் ஆயில் (5 கிராம்)
• பல்வேறு டிசைன் சிலிகான் அல்லது மர அச்சுகள்

தயாரிக்கும் முறை
தயாரிப்பைத் தொடங்குவதற்கு முன்னர், நன்கு காற்றோட்டமான இடத்தில் நீங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியம். கையுறைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் அணிவதை உறுதி செய்ய வேண்டும். காஸ்டிக் சோடா அரிக்கும் தன்மை கொண்டது, மேலும் அது உங்கள் தோலுக்கு எரிச்சலூட்டுவதால் பாதுகாப்பாக கையாள வேண்டும்,
1. நிறையத் தண்ணீரில் கேரட்டை கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீர், சோப்பு செய்ய பிறகு பயன்படும்.
2. நீங்கள் ஒரு பேஸ்ட் கிடைக்கும் வரை கொதித்த கேரட்டை நன்கு பிசையவும்.
3. ஒரு கிண்ணத்தில் கேரட் கூழ், உப்பு மற்றும் 190 மில்லி நீரை (கேரட் வேகவைக்க பயன்படுத்தியது) சேர்க்கவும்.
4. அதனுடன் சிறிது சிறிதாக காஸ்டிக் சோடா சேர்த்து அனைத்துப் பொருள்களும் நன்றாகக் கலக்கும் வரை ஒரு மரக் கரண்டியால் நன்கு கலக்க வேண்டும்.
5. இந்தக் கலவை சூடாக இருப்பதைக் காண்பீர்கள். இது காஸ்டிக் சோடாவின் காரணமாகும். இப்பொழுது கலவையை 1 மணிநேரத்திற்கு குளிர்வியுங்கள்.
6. கலவை குளிர்ந்தவுடன் எண்ணெய்களைச் சேர்த்து மரக் கரண்டியால் நன்கு கலந்து கொள்ளுங்கள். மாவு போன்ற நிலைத்தன்மையை அடையும் வரை இந்தக் கலவையை ஒரு வட்ட வடிவத்தில் நன்றாக கலக்கவும்.
7. இறுதியாக உருவான கலவையை மர அல்லது சிலிகான் அச்சுகளில் ஊற்றவும். மர அச்சைப் பயன்படுத்தினால், பேக்கிங் பேப்பரை லைனிங் ஆக பயன்படுத்தவும். இந்த வழியில், அச்சுகளிலிருந்து சோப்பை எளிதாக வெளியேற்றலாம்.
8. இந்த சோப்பை 48 மணி நேரம் கடினமடைய காய விட்டுவிடுங்கள். பின்னர் அச்சிலிருந்து நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
9. இந்த சோப்பை 6 வாரங்களுக்கு காற்றோட்டமான பகுதியில் ஒரு ரேக் மீது வைக்கவும். ஆமாம், காத்திருப்பு நீண்டதாக இருக்கிறது. இந்தக் காத்திருப்பு உங்களுக்கு ஆரோக்கியமான சோப் கிடைக்க அவசியம்.
இப்பொழுது, உங்கள் பொன்னான கைகளால் உருவான வாசனையான கேரட் சோப்பை மகிழ்ச்சியாகப் பயன்படுத்தத் தொடங்கலாம்.



Click it and Unblock the Notifications
