உங்க முடி பறவைக்கூடு மாதிரி அசிங்கமா இருக்கா? 'இத' ட்ரை பண்ணுங்க வளவளன்னு ஆகிடும்...!

முடியை நன்றாக அலசினாலும் ஊட்டமளிக்கும் சத்துக்கள் போதவில்லை என்றால் முடியின் ஆரோக்கியம் நிச்சயம் குறைய செய்யும். அவகேடோ பழத்தில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை போல, தலைமுடி ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதனால், பெரும்பாலும் முடி உதிர்தல், வழுக்கை ஏற்படுதல், வலுவிழந்த முடி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சிக்கு முடி மற்றும் சுருள் முடி கொண்ட பெரும்பாலான மக்கள் இதைப் பற்றி பேசுவார்கள் . உங்கள் தலைமுடி பறவைகளின் கூடு போல் இருக்கிறதா? இதற்கு, கவலைப்படாதீர்கள். பெரும்பாலான மக்கள் வறட்சியால் ஏற்படும் முடியின் நிலைக்கு தங்கள் தலைமுடியின் அமைப்பைக் காரணம் காட்டி சிகிச்சையைத் தவிர்க்கிறார்கள். ஆனால், அது தவறு.

Remedies for frizzy hair in tamil

உலர்ந்த கூந்தல், நுனி பிளவு, ஃப்ரீஸி ஹேர் போன்ற பிரச்சனைகள் உலர்ந்த கூந்தலை மேலும் வறட்சியாக்கி முடியை பலவீனமாக்கும். உங்கள் தலை முடியை பராமரிக்க கொஞ்சம் கூடுதல் முயற்சிகளை எடுப்பதன் மூலம் இதைச் சமாளிக்க முடியும். சிக்குண்ட முடியை சரிசெய்யவும், முடி உதிர்வை தடுக்கவும் உங்களுக்கு உதவும் உதவிக்குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவகேடோ ஹேர் மாஸ்க்

அவகேடோ ஹேர் மாஸ்க்

முடியை நன்றாக அலசினாலும் ஊட்டமளிக்கும் சத்துக்கள் போதவில்லை என்றால் முடியின் ஆரோக்கியம் நிச்சயம் குறைய செய்யும். அவகேடோ பழத்தில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவகேடோ முடி வறட்சி மற்றும் சேதத்துக்கு சிறந்த சக்திவாய்ந்த பொருள். அவகேடோ பழத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய அமிலங்கள் நிறைந்துள்ளன. இது வறட்சியை போக்கி கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிக்க உதவும். அவகேடோவில் இயற்கையாகவே இருக்கும் எண்ணெய் ஆனது முடிக்கு ஆழமான நீரேற்றத்தை அளிக்கிறது. இது உங்கள் தலைமுடியை நேராக்க உதவுகிறது.

முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

அவகேடோவை நன்றாக மசித்து கொள்ளவும். இதில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும். பிறகு இதை உச்சந்தலையில் தேய்த்து விடவும். முடி பாதிப்பு, உலர்ந்த இடங்கள் உள்ள பகுதிகளில் நன்றாக தேய்க்கவும். இதை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் வாரத்திற்கு இரண்டு முறை தடவினால், முடிவுகள் நன்றாக வளர்வதை நீங்களே காண்பீர்கள்.

மயோனிஸ்

மயோனிஸ்

மயோனிஸால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க், சிக்குண்ட முடியை சரிசெய்ய உதவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இது உங்கள் தலைமுடிக்கு அழகான பிரகாசத்தை அளிக்கிறது மற்றும் நீரேற்றத்தையும் வழங்குகிறது. இந்த ஹேர் மாஸ்க்கை மயோனிஸ், பாதாம் எண்ணெய் மற்றும் முட்டையின் மென்மையான பேஸ்டாக செய்யலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை முக்கியமான ஒரு பழமாகும். கோடை காலங்களில் அதிகமாக பருகப்படும் பழ சாறாக எலுமிச்சை பழச்சாறு உள்ளது. மேலும் சமையலில் எலுமிச்சைக்கு முக்கிய பங்குண்டு. அசைவத்தில் துவங்கி பல வகையான உணவுகளில் நாம் புளிப்பு சுவைக்காக எலுமிச்சையை சேர்க்கிறோம். எலுமிச்சை பழம் பல்வேறு மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த கலவையானது மக்களுக்கு அதிசயங்களைச் செய்கிறது. தேன் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, பளபளப்பான, பட்டுப் போன்ற முடியை உருவாக்குகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 3:2 என்ற விகிதத்தில் உச்சந்தலையிலும் முடியிலும் 30 நிமிடங்கள் தடவ வேண்டும். இதற்கிடையில், மற்ற ஹேர் மாஸ்குகளை பயன்படுத்த வேண்டும். இது நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுகிறது.

பீர்

பீர்

இது பெரும்பாலோனோரின் விருப்பமான பானமாக இருப்பதைத் தவிர, சிக்கு முடிக்கான தீர்வுகளைப் பற்றி பேசும்போது இது அனைவரின் முதல் விருப்பமாகவும் உள்ளது. வறண்ட மற்றும் ஆரோக்கியமற்ற கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் இதில் உள்ளன. அதனால்தான் பீர் ஷாம்புகள் மிகவும் பொதுவானவை. இதை ஒரே இரவில் டிகார்பனேட் செய்து, ஷாம்பு தடவிய உச்சந்தலையில் மற்றும் முடியில் மசாஜ் செய்வதன் மூலம் பயன்படுத்தலாம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இதைப் பின்பற்றினால் முடி உதிர்வதை தடுக்கலாம் மற்றும் சிக்கு முடிகள் வளவளப்பாக நேராக மாறும்.

கற்றாழை

கற்றாழை

காற்றாழையில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை முடியின் பளபளப்பு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. எனவே, சிக்கலான முடியை சரி செய்ய உதவுகிறது. கூடுதலாக, இது ஒரு டி-டாங்க்லராக நன்றாக வேலை செய்கிறது. மேலும் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. கற்றாழை மற்றும் பாதாம் எண்ணெயை சம விகிதத்தில் கலந்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விட்டுவிடுங்கள். விரைவில் பலன் பெறுவீர்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

கட்டிகள் இல்லாமல் வாழைப்பழத்தை மசித்து, பின்னர் தேன் மற்றும் எண்ணெயைச் சேர்த்து, கூந்தலில் தடவி ஒரு 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். மிகவும் சிக்கு உருவாகும் முடிக்கு வாரம் ஒருமுறை இதைச் செய்ய வேண்டும். அப்படி செய்தால், உங்கள் முடி சிக்கு இல்லாமல் வளவளப்பாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, November 27, 2021, 16:49 [IST]
Desktop Bottom Promotion