Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
முடி உதிர்தலை தடுத்து பலன் தரும் அருமையான குறிப்புகள்!!
பொடுகுத் தொல்லை மறைந்து முடி உதிர்தலை தடுத்து அடர்த்தியாக வளரச் செய்யும் அருமையான பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.

இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். அவ்வாறன பலன் தரும் வைத்தியங்கள் இங்கே.

எள்ளு இலைகள் :
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் நிற்கத் தொடங்கும்.

கசகசா :
கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.

மருதாணி
தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம்.

கருவேப்பிலை எண்ணெய் :
கறிவேப்பிலையை நைசாக அரைத்து, சிறு சிறு உருண்டையாக்கி வெயிலி காய வையுங்கள். பின்னர் நன்றாக காய்ந்த பின் தலைக்கு குளிக்கும் நாட்களில், நீங்கள் விருப்பப்பட்ட எண்ணெயை சூடுபடுத்தி அதில் ஒரு உருண்டையை போட்டு காய்ச்சுங்கள்.
இந்த எண்ணெய்க் கொண்டு மசாஜ் செய்து குறைந்தது 1 மணி நேரம் இருந்து தலைக்கு குளியுங்கள். இபப்டி செய்தால் முடி அடர்த்தியாக வளரும்.

வெந்தயம் கடலைபருப்பு :
வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து ஊற வையுங்கள். பின் இந்த இரண்டையும் தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.



Click it and Unblock the Notifications