Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
முடி உதிர்தலை தடுத்து பலன் தரும் அருமையான குறிப்புகள்!!
பொடுகுத் தொல்லை மறைந்து முடி உதிர்தலை தடுத்து அடர்த்தியாக வளரச் செய்யும் அருமையான பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.

இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். அவ்வாறன பலன் தரும் வைத்தியங்கள் இங்கே.

எள்ளு இலைகள் :
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் நிற்கத் தொடங்கும்.

கசகசா :
கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.

மருதாணி
தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம்.

கருவேப்பிலை எண்ணெய் :
கறிவேப்பிலையை நைசாக அரைத்து, சிறு சிறு உருண்டையாக்கி வெயிலி காய வையுங்கள். பின்னர் நன்றாக காய்ந்த பின் தலைக்கு குளிக்கும் நாட்களில், நீங்கள் விருப்பப்பட்ட எண்ணெயை சூடுபடுத்தி அதில் ஒரு உருண்டையை போட்டு காய்ச்சுங்கள்.
இந்த எண்ணெய்க் கொண்டு மசாஜ் செய்து குறைந்தது 1 மணி நேரம் இருந்து தலைக்கு குளியுங்கள். இபப்டி செய்தால் முடி அடர்த்தியாக வளரும்.

வெந்தயம் கடலைபருப்பு :
வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து ஊற வையுங்கள். பின் இந்த இரண்டையும் தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.



Click it and Unblock the Notifications











