Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
முடி உதிர்தலை தடுத்து பலன் தரும் அருமையான குறிப்புகள்!!
பொடுகுத் தொல்லை மறைந்து முடி உதிர்தலை தடுத்து அடர்த்தியாக வளரச் செய்யும் அருமையான பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.

இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். அவ்வாறன பலன் தரும் வைத்தியங்கள் இங்கே.

எள்ளு இலைகள் :
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் நிற்கத் தொடங்கும்.

கசகசா :
கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.

மருதாணி
தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம்.

கருவேப்பிலை எண்ணெய் :
கறிவேப்பிலையை நைசாக அரைத்து, சிறு சிறு உருண்டையாக்கி வெயிலி காய வையுங்கள். பின்னர் நன்றாக காய்ந்த பின் தலைக்கு குளிக்கும் நாட்களில், நீங்கள் விருப்பப்பட்ட எண்ணெயை சூடுபடுத்தி அதில் ஒரு உருண்டையை போட்டு காய்ச்சுங்கள்.
இந்த எண்ணெய்க் கொண்டு மசாஜ் செய்து குறைந்தது 1 மணி நேரம் இருந்து தலைக்கு குளியுங்கள். இபப்டி செய்தால் முடி அடர்த்தியாக வளரும்.

வெந்தயம் கடலைபருப்பு :
வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து ஊற வையுங்கள். பின் இந்த இரண்டையும் தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.



Click it and Unblock the Notifications