Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
முடி உதிர்தலை தடுத்து பலன் தரும் அருமையான குறிப்புகள்!!
பொடுகுத் தொல்லை மறைந்து முடி உதிர்தலை தடுத்து அடர்த்தியாக வளரச் செய்யும் அருமையான பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.

இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். அவ்வாறன பலன் தரும் வைத்தியங்கள் இங்கே.

எள்ளு இலைகள் :
எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் நிற்கத் தொடங்கும்.

கசகசா :
கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.

மருதாணி
தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம்.

கருவேப்பிலை எண்ணெய் :
கறிவேப்பிலையை நைசாக அரைத்து, சிறு சிறு உருண்டையாக்கி வெயிலி காய வையுங்கள். பின்னர் நன்றாக காய்ந்த பின் தலைக்கு குளிக்கும் நாட்களில், நீங்கள் விருப்பப்பட்ட எண்ணெயை சூடுபடுத்தி அதில் ஒரு உருண்டையை போட்டு காய்ச்சுங்கள்.
இந்த எண்ணெய்க் கொண்டு மசாஜ் செய்து குறைந்தது 1 மணி நேரம் இருந்து தலைக்கு குளியுங்கள். இபப்டி செய்தால் முடி அடர்த்தியாக வளரும்.

வெந்தயம் கடலைபருப்பு :
வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து ஊற வையுங்கள். பின் இந்த இரண்டையும் தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.



Click it and Unblock the Notifications