Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
பொடுகினால் வரும் முகப்பருக்களைப் போக்க 7 வழிகள்!!!
உங்கள் தலையில் நிறையப் பொடுகுகள் உள்ளதா? அப்படியானால் உங்களுக்கு முகப்பருக்கள் வரும் வாய்ப்பும் அதிகம் என்று அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதிலும் உங்களுக்கு ஏற்கனவே பருக்கள் இருந்தால், இந்தப் பொடுகுகள் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
தலையின் உலர்ந்த தோல் பகுதிகளில் செதில் செதிலாக உதிர்வது தான் பொடுகு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தப் பொடுகுகள் உங்கள் முகத்தைத் தாக்குவதால் பருக்கள் வெடிக்கின்றன. சிலருக்கு உடலிலும் சிறு சிறு பருக்கள் தோன்றும்.
பருக்கள் வர பல காரணங்கள் கூறப்பட்டாலும், பொடுகும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. இந்தப் பொடுகால் வரும் பருக்களிலிருந்து தப்பிக்க 7 வழிகள் உள்ளன.

பொடுகு எதிர்ப்பு ஷாம்பு
வாரத்திற்கு இரு முறை நல்ல பொடுகு எதிர்ப்பு ஷாம்புவை முடிகளில் பயன்படுத்தவும். ஸ்கால்ப், காதுகள், முகம் என்று பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் இந்த ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். பொடுகுகள் மற்ற இடங்களில் படாதவாறு தலைமுடியைக் கழுவ வேண்டும்.

கண்டிஷனர்
ஷாம்பு போட்டுக் கழுவிய பின் கண்டிஷனர்களைப் பயன்படுத்தும் போது, அது உச்சந்தலையில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கண்டிஷனரிலிருந்து வரும் நுரைகளையும் தலைமுடியிலேயே தங்கிவிடாதவாறு சுத்தமாகக் கழுவ வேண்டும்.

முகத்தில் முடி படக் கூடாது
தலைமுடியில் உள்ள பொடுகுகள் முகத்தில் பட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பருக்கள் கண்டிப்பாக வந்துவிடும்.

சூடான எண்ணெய் மசாஜ்
வாரத்திற்கு ஒரு முறை சூடான எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், இரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்துகிறது. மேலும் இது உலர்ந்த செதில்களை நீக்கவும், பளபளப்பாக வைத்திருக்கவும் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ்
உச்சந்தலையில் சிறிது எலுமிச்சை ஜூஸைத் தடவி, 30 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் நன்றாக தலைமுடியைக் கழுவ வேண்டும். இதனால் எலுமிச்சையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

முடி ஸ்டைல் வேண்டாம்
தலைமுடிகளை ஸ்டைலாக வைத்திருக்க உதவும் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தி முடியை உலர விட்டால் பொடுகுகள் பல்கிப் பெருகக் கூடும். பின்னர் அவை முகத்தைத் தாக்கி, பருக்களை ஏற்படுத்தும்.

அடிக்கடி தலை சீவவும்
ஒரு நாளைக்கு 2 முறையாவது தலைமுடியை சீவ வேண்டும். அடிக்கடி தலைமுடியை சீவுவதால், அதிலிருக்கும் இறந்த செல்கள் நீக்கப்படும். மேலும், ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications











