Hair Care: ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன் ஏன் அவசியம் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும் தெரியுமா?

Hair Care Tips: முடியை ஆரோக்கியமாக பராமரிப்பது என்பது அனைவரின் ஆசையாகும், ஆனால் அனைவராலும் அதை வெற்றிகரமாக செய்ய முடிவதில்லை. நமது பாரம்பரியத்தில் முடியை ஆரோக்கியமாக பராமரிக்க சில பயனுள்ள வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட பழங்கால நடைமுறைகளில் ஒன்று ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன் முடிக்கு எண்ணெய் தடவுவது.

இந்தியர்கள் பல நூற்றாண்டுகளாக இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனர், ஆனால் இந்த வழிமுறை உண்மையில் அவசியமானதா, அல்லது இது ஒரு பழமையான கட்டுக்கதையா? ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன் தலைக்கு எண்ணெய் தடவுவதில் உள்ள நன்மைகள் மற்றும் குறைபாடுகள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Hair Care Why Oiling Hair Before Shampooing Is Important

உச்சந்தலை மற்றும் முடிக்கு ஊட்டமளிக்கிறது

ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது உச்சந்தலை மற்றும் முடி இரண்டிற்கும் போதுமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் முடி தண்டு மற்றும் உச்சந்தலையில் ஊடுருவி, ஈரப்பதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. அதன்மூலம் முடியை வலிமையாக்குகின்றன.

புரத இழப்பைக் குறைக்கிறது

முடி கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது. வழக்கமான ஷாம்பு பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பம் ஆகியவை முடியிலிருந்து குறிப்பிடத்தக்க புரத இழப்பை ஏற்படுத்தும். ஷாம்பு போடுவதற்கு முன் எண்ணெய் தேய்ப்பது, குறிப்பாக தேங்காய் எண்ணெய் தேய்ப்பது, முடி தண்டில் பாதுகாப்பு அடுக்கை உருவாக்குவதன் மூலம் புரத இழப்பைக் குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

வறட்சியைத் தடுக்கிறது

ஷாம்புக்கள் கடுமையான இரசாயனங்கள் கொண்டவை, அது தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெய்களை அகற்றி, வறட்சி மற்றும் உதிர்தலுக்கு வழிவகுக்கும். ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன் எண்ணெய் தடவுவது ஒரு தடையை உருவாக்க உதவுகிறது, இது முடியை அலசும் போது அதிகப்படியான ஈரப்பதத்தை இழப்பதைத் தடுக்கிறது. இதனால் முடியை மென்மையாகவும் மற்றும் நிர்வகிக்கக்கூடியதாகவும் வைத்திருக்கும்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

உச்சந்தலையில் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. இது உரோமக்கால்களுக்கு மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் விநியோகத்தை மேம்படுத்துகிறது, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்வை குறைக்கிறது.

சிக்கு விழாமல் தடுக்கிறது

ஷாம்பு போட்டு குளிக்கும் முன் முடியில் எண்ணெய் தேய்த்தால், அது சிக்கு விழாமல் தடுக்கிறது. எண்ணெய் முடி இழைகளை வழவழப்பாக மாற்றுகிறது. இது சீப்பு உபயோகிப்பதால் மற்றும் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் முடி உதிர்தல் மற்றும் சேதத்தை குறைக்கிறது.

ஷாம்பு போட்டு குளிக்கும் முன் எண்ணெய் தடவுவதற்குப் பின்னால் உள்ள காரணம்

ஷாம்பு போட்டு குளிக்கும் முன் முடிக்கு எண்ணெய் தடவுவது ஒரு பாரம்பரியம் மட்டுமல்ல,அதில் அறிவியலும் உள்ளது. தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்கள் அவற்றின் குறைந்த மூலக்கூறு எடை மற்றும் நேரான சங்கிலி அமைப்பு காரணமாக முடி தண்டுக்குள் ஊடுருவிச் செல்லும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளன. அதன்பின் குளிக்கும் போது தண்ணீரை உறிஞ்சுவதால் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எண்ணெய்களில் லாரிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்க்கின்றன. இது நோய்த்தொற்றுகள் மற்றும் பொடுகுத் தொல்லைகளைத் தடுப்பதன் மூலம் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

Story first published: Wednesday, November 13, 2024, 23:28 [IST]
Desktop Bottom Promotion