Just In
- 2 hrs ago
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- 5 hrs ago
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- 13 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- 13 hrs ago
பாதாம் எண்ணெயை உங்க தலை முடியில இப்படி யூஸ் பண்ணா... கிடுகிடுன்னு முடி வளர்ந்து பளபளன்னு மின்னுமாம்!
Don't Miss
- Movies
தளபதி 67 பட ஷூட்டிங்கிற்கு தனி ஹெலிகாப்டரில் சென்றாரா கமல்? டிரெண்டாகும் புகைப்படம்.. உண்மை என்ன?
- News
கடுமையான போட்டி.. அதிமுக வேட்பாளர் அறிவிப்பதற்கு தாமதமாக காரணம் இதுதான்.. எஸ்பி வேலுமணி பேச்சு!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உங்க மார்பகத்தில் ஏற்படும் இந்த பிரச்சனையை சரிசெய்ய ஆயுர்வேதம் சொல்லும் இந்த பொருட்கள யூஸ் பண்ணுங்க!
பெண்கள் தினமும் சந்திக்கும் அவஸ்தைகளில் ஒன்று ப்ரா அணிவது. அவை, சரியாக பொருத்தமாக இருக்கும்போது, பிரச்சனை இல்லை. ஆனால், அதன் துணி தரமில்லாமல் இருக்கும்போதும், மிக இறுக்கமான ப்ராவாக இருந்தால், அது உங்களை அசெளகரியாமாக உணர வைக்கும். நீண்ட நேரம் உள்ளாடை அல்லது ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்த பிறகு எப்போதாவது சங்கடமாக உணர்ந்திருக்கிறீர்களா? இந்த அசௌகரியம் மார்பக அடிப்பகுதியில் சொறி மற்றும் தடிப்புகள் என அதிகரிக்கும் போது அது மிகவும் எரிச்சலூட்டும். இது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதன் விளைவாக வலி, அரிப்பு சிவப்பு, நிறமாற்றம் செய்யப்பட்ட தோல் வெடிப்புகள் மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.
மார்பக சொறி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று மார்பின் கீழ் அதிகப்படியான வியர்வை தங்குவது. உங்கள் மார்பகத்தின் கீழ் சில தடிப்புகள் வந்து, தானாகவே மறைந்துவிடும். ஆனால், சிலவற்றிற்கு சிகிச்சை தேவைப்படலாம். மார்பகத் தடிப்புகளை அகற்றுவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், நீங்கள் முயற்சி செய்யக்கூடிய இயற்கை வைத்தியம் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

மார்பக அடிப்பகுதியில் தடிப்பு மற்றும் சொறி
உடலின் ஒரு பகுதி கடினமான பொருள் அல்லது துணியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும்போது, துர்நாற்றம் ஏற்படுகிறது. நீங்கள் நாள் முழுவதும் அணியும் ப்ராவின் காரணமாகவும் இது நடக்கலாம். ப்ரா சேஃபிங் செய்வது கடினமான மற்றும் சில நேரங்களில் எரிச்சலூட்டும் அரிப்பு மற்றும் சொறிகளை ஏற்படுத்தும். தட்பவெப்பநிலை, வாழ்க்கை முறை மற்றும் தூய்மை ஆகியவை பிரச்சனையை ஏற்படுத்தும் அதே வேளையில், மார்பக அடிப்பகுதியில் சொறி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் உங்கள் ப்ராவின் பொருள் மற்றும் பொருத்தம் ஆகும்.

ஆயுர்வேத இயற்கை வைத்தியம்
பெண்கள் வசதியான துணியால் செய்யப்பட்ட ப்ராவை அணிய வேண்டும். ஒரு இடைவேளைக்குப் பிறகு அதை மாற்றுவதும் நீங்கள் அசெளகாரியமாக இருப்பதை தவிர்க்க உதவும். பித்த பிரகிருதியில், மக்களின் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும். எனவே வசதியான ஆடைகள் மற்றும் மிதமான உணவை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. வாத பிரகிருதியில் தோல் கரடுமுரடானது, எனவே சருமத்தை ஈரப்பதமாக்குவது பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் ப்ராவின் காரணமாக மார்பில் தடிப்புகள் ஏற்பட்டால் இருக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சில இயற்கை வைத்தியங்கள் பற்றி இங்கு காணலாம்.

திரிபலா
திரிபலா என்பது மருத்துவ குணங்களைக் கொண்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான குணப்படுத்தும் தீர்வாகும். வயிற்றுக் கோளாறுகள் முதல் பல் துவாரங்கள் வரை, இது பல்நோக்கு சிகிச்சை பலன்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், திரிபலா ப்ரா சேஃபிங்கிற்கு ஒரு சிறந்த தீர்வாகவும் இருக்கும். மேலும், இதில் கிருமி நாசினிகள் மற்றும் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. திரிபலா டிகாஷனைக் கொண்டு சுத்தம் செய்வது ப்ரா சேஃபிங்கைச் சமாளிக்க உதவும்.

மருந்து எண்ணெய்கள்
சருமம் கரடுமுரடாக இருக்கும் போது அதை மென்மையாக்க சிறந்த வழிகளில் ஒன்று ஜாத்யாதி க்ரிதம், சுகுமார க்ரிதம் போன்ற மருந்து எண்ணெய்கள் ஆகும். இவை மருத்துவ எண்ணெய்கள் அடிப்படையில் பல்வேறு ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் எண்ணெய்களின் கலவையாகும். அவை உடலில் உள்ள பிரச்சனைகளை சமாளிக்க உதவும். இது உட்பட பல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க மருந்து எண்ணெய்கள் பயன்படுகிறது.

இயற்கை பொடிகள்
ஆயுர்வேத பொடிகள் ஆயுர்வேதத்தின் போதனைகளை வாழ்க்கையில் செயல்படுத்த சிறந்த மற்றும் புதிய வழி. ஆயுர்வேத தூளைப் பயன்படுத்துவது புதிய அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். சந்தன பொடி, கோக்ஷுரா பொடி அல்லது அஸ்வகந்தா பொடியுடன் அந்த இடத்தை சுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இவை அனைத்தும் குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளன, இது ப்ரா சேஃபிங்கிற்கு சிகிச்சையளிக்க உதவும்.

இறுதிக்குறிப்பு
ப்ரா தேய்மானத்திற்கு சிகிச்சையளிக்க இரவில் இந்த இயற்கை பொருட்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதியில் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன், ஒரு பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். மேலும், பயன்படுத்துவதற்கு முன்பு ஆயுர்வேத நிபுணரிடம் ஆலோசனை செய்துகொள்வதும் நல்லது.