Latest Updates
-
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா?
நீங்க போடும் ஷாம்புவில் கொஞ்சம் உப்பு கலந்து பயன்படுத்தினால் முடிக்கு என்னென்ன நன்மைகள் தெரியுமா?
நீங்க போடும் ஷாம்புவில் கொஞ்சம் உப்பு கலந்து பயன்படுத்தினால் முடிக்கு என்னென்ன நன்மைகள் என பார்க்கலாம்.
உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கொஞ்சமாய் பயன்படுத்த வேண்டுமென்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் அழகிற்கு அப்படி அவசியமில்லை. காரணம் சருமத்திற்கும் சரி, அழகிற்கும் சரி பலவித அற்புதங்களை தருகிறது.
பொடுகினை முற்றிலும் தடுக்கவும், கிருமிகளின் தொற்றை நீக்கவும் உப்பு முக்கியமாக பயன்படுகிறது. அதுபோல் சருமத்திற்கும் பலவித நன்மைகளை தருகிறது. முகப்பருக்களையும் கருமையையும் போக்க உப்பு உதவுகிறது.

எண்ணெய் சருமத்தினை உப்பு கட்டுப்படுத்தும். அதோடு காயங்கள், சூட்டு காயங்களுக்கும் மருந்தாக உப்பு பயன்படுத்தும். உப்பை தனியாக பயன்படுத்துவதை விட அதனுடன் மற்ற அழகுக் பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் விரைவில் பலன் தரும்.
நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டாம். நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்புவுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பயன்படுத்தினால் உங்கள் கூந்தலுக்கு என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

முடி வளர்ச்சிக்கு :
முடி வளர்ச்சியை உப்பு தூண்டுகிறது. முடி உதிர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது வரபிரசாதம். உப்பு சிறிதை ஷாம்புவுடன் கலந்து பயன்படுத்திப் பாருங்கள். முடி வேகமாய் வளர்வது தூண்டப்படும். முடி உதிர்வு கட்டுப்படுத்துகிறது.

பொடுகு :
பொடுகுத் தொல்லை அறவே நீங்கி விடும். உப்பு ஒரு கிருமி நாசினி. ஆகவே பொடுகிற்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது. பொடுகு காரணமாக உண்டாகும் முடி உதிர்வு, அரிப்பு போன்றவற்றிற்கும் நல்ல தீர்வு காணலாம்.

எண்ணெய் கூந்தல் :
உங்களுக்கு எண்ணெய் கூந்தலென்றால் இது மிகச் சிறப்பான தேர்வு. எண்ணெய் ஸ்கால்ப் மற்றும் எண்ணெய் கூந்தலுக்கு உந்த உப்பு கலந்த ஷாம்புவை பயன்படுத்துங்கள். இது அதிக எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இதனால் ஆரோக்கியமான கூந்தல் வளரும்.

மிருதுவான கூந்தல் :
சிலருக்கு கூந்தல் கரடுமுரடாக இருக்கும். மென்மையாகவே இருக்காது. அவரகள் இந்த ஷாம்புவை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது கூந்தல் மிருதுத் தன்மை பெறும். பளபளப்பாக மாறும்.

பாடி ஸ்க்ரப் :
உங்கள் உடலுக்கு ஸ்க்ரப்பாகவும் உப்பை பயன்படுத்தலாம். இது இறந்த செல்களை உடலிலிருந்து நீக்குவதால் சரும அலர்ஜி மற்றும் வயது முதிர்ச்சியை தடுக்கலாம். சருமத்தில் அழுக்கு சேர்வதை உப்பு தடுக்கிறது.

மென்மையான சருமம் :
சருமம் சிலருக்கு தடிப்பாகவும் , மேடுபள்ளமாகவும் இருக்கும். அவர்கள் உப்பு பயன்படுத்தும்போது சருமம் மென்மையாகிறது. ஒரு ஸ்பூன் ஆலில் எண்ணெயுடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் மென்மையாகும்.

முகப்பருக்கள் நீங்க :
எலுமிச்சை சாறு, தயிர் இர்ண்டையும் தலா 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் அரை ஸ்பூன் அளவு உப்பு கலந்து முகத்தில் த்டவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த குறிப்பை தவறாமல் செய்தால் முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாது. மென்மையாக முகம் மாறும்.

பளபளப்பான சருமம் :
அரை ஸ்பூன் உப்பை 1 ஸ்பூன் தேபில் கலந்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இது சுருக்கம் கன்னத்தில் இருக்கும் மெல்லிய கோடுகள் போன்றவற்றை நீக்குகிறது. வாரம் 3 நாட்கள் செய்தால் சருமம் இளமையாகவும் இருக்கும்.

குளியலுக்கு :
தினமும் குளிக்கும்போது நீரில் அரை ஸ்பூன் உப்பு மற்றும் சில துளி எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தினால் சருமம் சம்பந்தப் பட்ட எந்த பிரச்சனையும் உங்களை அணுகாது. கிருமிகள், வியர்வை நாற்றம் எல்லாம் மறைந்துவிடும்.

வீங்கிய கண்களுக்கு :
சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் சில சமயம் கண்களுக்கு அடியில் ரப்பை வீங்கிக் கொள்ளும். இதனால் வயதான தோற்றம் கிடைக்கும். இதனை தவிர்க்க, உப்பை சிறிது நீரில் கரைத்து, அந்த உப்புக் கரைசலை கண்களுக்கு அடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் சில நாட்களில் பழையபடி கண்களின் தோற்றத்தை பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications