Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
தூக்கி எறியும் க்ரீன் டீ பேக்குகளைக் கொண்டு அழகை எப்படி மேம்படுத்தலாம்?
தற்போது க்ரீன் டீ மக்களிடையே மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான ஓர் பானமாக உள்ளது. க்ரீன் டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பல இடங்களில் படித்திருப்பீர்கள். அதற்காக தினமும் காலையில் க்ரீன் டீ குடிப்போரின் எண்ணிக்கையும் அதிகம். அப்படி குடிப்பதற்கு க்ரீன் டீ போடும் போது, அதன் பேக்கை பலரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் இனிமேல் அப்படி செய்யாதீர்கள். ஏனெனில் க்ரீன் டீ பேக்கைக் கொண்டு அழகைப் பராமரிக்கலாம்.
ஆம், க்ரீன் டீயின் பேக்கில் சருமத்திற்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. சரி, இப்போது க்ரீன் டீயின் பேக்குகளை எப்படி சருமத்திற்கு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

கண்களுக்கு நல்லது
க்ரீன் டீ போட்ட பின் அந்த பேக்குகளை குளிர வைத்து, அதனை கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால், அதில் உள்ள டேனின் கண்களைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுப்பதோடு, கருவளையங்களையும் நீக்கும்.

ஸ்கரப்
க்ரீன் டீ பேக்குகளில் உள்ளதை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் சர்க்கரை மற்றும் நீர் கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பு தந்து, முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.

தேன் மற்றும் பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா மற்றும் க்ரீன் டீயை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடனும், சுருக்கமின்றியும், பொலிவோடும் இருக்கும்.

க்ரீன் டீ பேக் ஸ்கரப்
காலையில் உங்கள் முகம் பொலிவிழந்து காணப்பட்டால், க்ரீன் டீயின் பேக்கில் உள்ள நீரை பிழிந்துவிட்டு, அந்த பேக்கைக் கொண்டு முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவுங்கள். இதனால் முகம் பொலிவோடு காணப்படும்.

முடிக்கு...
ஆம், க்ரீன் டீயைக் கொண்டு முடியை அலசினால், முடி நன்கு கருப்பாகவும், பட்டுப்போன்றும் மின்னும். அதற்கு இரவில் படுக்கும் போது க்ரீன் டீ பேக்குகளை கொதிக்கும் நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க விட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முடியை நீரில் அலசி, பின் க்ரீன் டீ நீரை தலையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.



Click it and Unblock the Notifications











