Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
தோல் பளபளக்க... முடி மினுமினுக்க... சாத்துக்குடி யூஸ் பண்ணுங்க...
சிலருக்குக் கண்களில் கருவளையம், உதடுகள் வறண்டு கருப்பாக மாறுவது ஆகியவை சகஜம் தான். இதற்காக அவர்கள் பல க்ரீம்களையும், ஃபேஸ் வாஷ்களையும் தேடி ஓடுவார்கள். இன்னும் சிலர், பியூட்டி பார்லருக்குப் படை எடுப்பார்கள்.
அதெல்லாம் எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு சாத்துக்குடிப் பழம் போதும்! அதில் உள்ள சிட்ரிக் அமிலம், கருவளையத்தையும், வறட்சிகளையும் போக்குவதோடு மட்டுமல்லாமல், முகத்தைப் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சாத்துக்குடியானது ஒருசில முடி பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வை வழங்குகிறது.
இப்போது அதிக செலவே இல்லாமல், வெறும் சாத்துக்குடிப் பழத்தை வைத்துக் கொண்டே எப்படி இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பது பற்றிப் பார்ப்போமா...!

கரும்புள்ளிகளை நீக்கும்
முகத்தை சோப்பு பயன்படுத்தி நன்றாகக் கழுவித் துடைத்து, பின் சாத்துக்குடிப் பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை முகம் முழுவதும் சுமார் 12 நிமிடங்கள் வரை தேய்க்கவும். பின்னர் ஒரு உலர்ந்த துணியால் முகத்தை சுத்தமாகத் துடைத்து, நீரில் நன்றாகக் கழுவவும். இதனால் அதில் உள்ள சிட்ரிக் ஆசிட்டானது, முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதில் வெளியேற்றிவிடும்.

பருக்களைப் போக்கும்
சாத்துக்குடிப் பழத்தின் தோலை நன்றாக அரைத்து, அதை முகத்தில் தடவினால் பருக்கள் மறைந்து போகும்.

கருப்பு நிற உதடுகளுக்கு...
சாத்துக்குடி சாற்றை தினமும் 3-4 முறை உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் உள்ள கருப்பு மறைவதுடன், உதடு வெடிப்புகளும் நீங்கும்.

பொடுகுத் தொல்லைக்கு சிறந்த தீர்வு
சாத்துக்குடி பழத்தின் சாற்றை தலையில் அடிக்கடி தடவி வந்தால், பொடுகு நீங்குவதுடன், முடிகளும் பளபளப்பாகும்.

கருமையைப் போக்கும்
முகத்தில் மட்டுமல்லாமல், கழுத்து, அக்குள், முழங்கை மற்றும் முழங்கால் ஆகிய பகுதிகளிலும் சாத்துக்குடியை நன்றாகத் தேய்த்தால், அந்த இடத்தில் உள்ள கருமையானது நீங்கி பளபளப்பாக மாறும்.



Click it and Unblock the Notifications











