Latest Updates
-
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
தோல் பளபளக்க... முடி மினுமினுக்க... சாத்துக்குடி யூஸ் பண்ணுங்க...
சிலருக்குக் கண்களில் கருவளையம், உதடுகள் வறண்டு கருப்பாக மாறுவது ஆகியவை சகஜம் தான். இதற்காக அவர்கள் பல க்ரீம்களையும், ஃபேஸ் வாஷ்களையும் தேடி ஓடுவார்கள். இன்னும் சிலர், பியூட்டி பார்லருக்குப் படை எடுப்பார்கள்.
அதெல்லாம் எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு சாத்துக்குடிப் பழம் போதும்! அதில் உள்ள சிட்ரிக் அமிலம், கருவளையத்தையும், வறட்சிகளையும் போக்குவதோடு மட்டுமல்லாமல், முகத்தைப் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சாத்துக்குடியானது ஒருசில முடி பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வை வழங்குகிறது.
இப்போது அதிக செலவே இல்லாமல், வெறும் சாத்துக்குடிப் பழத்தை வைத்துக் கொண்டே எப்படி இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பது பற்றிப் பார்ப்போமா...!

கரும்புள்ளிகளை நீக்கும்
முகத்தை சோப்பு பயன்படுத்தி நன்றாகக் கழுவித் துடைத்து, பின் சாத்துக்குடிப் பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை முகம் முழுவதும் சுமார் 12 நிமிடங்கள் வரை தேய்க்கவும். பின்னர் ஒரு உலர்ந்த துணியால் முகத்தை சுத்தமாகத் துடைத்து, நீரில் நன்றாகக் கழுவவும். இதனால் அதில் உள்ள சிட்ரிக் ஆசிட்டானது, முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதில் வெளியேற்றிவிடும்.

பருக்களைப் போக்கும்
சாத்துக்குடிப் பழத்தின் தோலை நன்றாக அரைத்து, அதை முகத்தில் தடவினால் பருக்கள் மறைந்து போகும்.

கருப்பு நிற உதடுகளுக்கு...
சாத்துக்குடி சாற்றை தினமும் 3-4 முறை உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் உள்ள கருப்பு மறைவதுடன், உதடு வெடிப்புகளும் நீங்கும்.

பொடுகுத் தொல்லைக்கு சிறந்த தீர்வு
சாத்துக்குடி பழத்தின் சாற்றை தலையில் அடிக்கடி தடவி வந்தால், பொடுகு நீங்குவதுடன், முடிகளும் பளபளப்பாகும்.

கருமையைப் போக்கும்
முகத்தில் மட்டுமல்லாமல், கழுத்து, அக்குள், முழங்கை மற்றும் முழங்கால் ஆகிய பகுதிகளிலும் சாத்துக்குடியை நன்றாகத் தேய்த்தால், அந்த இடத்தில் உள்ள கருமையானது நீங்கி பளபளப்பாக மாறும்.



Click it and Unblock the Notifications