Just In
- 18 min ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 1 hr ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 1 hr ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 2 hrs ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
Don't Miss
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
காலையில் எழுந்ததும் கண்கள் சிவப்பாகவும் வீங்கியும் உள்ளதா? இத ட்ரை பண்ணுங்க...
பெரும்பாலானோருக்கு காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்க்கும் பழக்கம் இருக்கும். அவ்வாறு பார்க்கும் போது முதலில் கண்களைத் தான் பார்ப்போம். ஆனால் இரவில் தாமதமாக தூங்கி இருந்தால், கண்கள் சோர்வுடனும், சிவப்பு நிறத்திலும் வீங்கி காணப்படும். இந்த கண்களுடன் அப்படியே அலுவலகத்திற்கோ அல்லது வெளியே சென்றாலோ நன்றாக இருக்காது.
ஆகவே அப்படி சிவப்பாகவும், வீக்கத்துடன் இருக்கும் கண்களை சாதாரணமானதாக்குவதற்கு, காலையில் 20 நிமிடம் ஒதுக்கினால் போதும், அதனைப் போக்கிவிடலாம். ஏனெனில் அத்தகைய வீக்கத்தை ஒருசிலப் பொருட்களைக் கொண்டு சரிசெய்து விடலாம். மேலும் இங்கு குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும், மிகவும் எளிதில் வீட்டில் கிடைக்கக்கூடியவை.
சரி, இப்போது அப்படி சிவப்பாகவும், வீங்கியும் இருக்கும் கண்களை குணப்படுத்துவதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போமா!!!
டீ பேக்
டீ பேக்கை குளிர்ந்த நீரில் சிறிது ஊற வைத்து, பின் அதனை கண்களின் மேல் வைத்தால், டீ பேக்கில் உள்ள பொருட்கள், கண்களில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, கண்களை பொலிவாக வெளிப்படுத்தும்.
ஸ்பூன்
நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும் சில்வர் ஸ்பூனை கண்களின் மேல் வைத்தால், வீக்கத்தைக் குறைக்கலாம். மேலும் இந்த முறையை ஸ்பூன் குளிர்ச்சியை இழக்கும் வரை செய்ய வேண்டும். இதனால் நிச்சயம் கண்களில் உள்ள சிவப்பு நீங்கிவிடும்.
மில்க் க்ரீம்
குளிர்ச்சியான மில்க் க்ரீமை கண்களைச் சுற்றி தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, அதனை கண்களின் மேல் வைத்து, சிறிது நேரம் உட்கார்ந்து பின் குளிக்க செல்ல வேண்டும். இதனால் கண்களில் ஏற்படும் வீக்கம் குறைந்து, கண்கள் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
ஐஸ் கட்டிகள்
ஐஸ் கட்டிகளைக் கொண்டு, கண்களை மசாஜ் செய்தால், வீக்கம் குறைந்துவிடும். மேலும் இந்த முறையின் மூலம் கண்களில் உள்ள சோர்வும் நீங்கிவிடும்.
இயற்கை எண்ணெய்கள்
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் கொண்டு, கண்களை மசாஜ் செய்தால், கண்களைச் சுற்றி இரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆகவே கண் வீக்கமும் தணியும்.
ரோஜா இதழ்கள்
இரவில் படுக்கும் போதே, ரோஜா இதழ்களை தண்ணீரில் ஊற வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவுவதோடு, ரோஜா இதழ்களை வீக்கமுள்ள கண்களின் மேல் வைக்க வேண்டும்.
சாவி
சிவப்பாகவும், வீக்கதுடனும் காணப்படும் கண்களை உடனே சரிசெய்ய வேண்டுமெனில், நன்கு குளிர்ச்சியாக இருக்கும் சாவியை கண்களின் மேல் வைத்தால், கண்கள் புத்துணர்ச்சியுடனும், பிரச்சனைகளின்றியும் இருக்கும்.