Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
கண்கள் களைப்படையாம பாத்துக்கோங்க!

கண் எரிச்சல்
பருத்தி துணியில் இரண்டு மூன்று துளி ரோஸ் வாட்டர் ஊற்றி அத்துடன் விளக்கெண்ணெய் கலந்து அந்த துணியை இமைகளின் மீது பூசவும். கண்களில் எரிச்சல் இருந்தால் உடனடியாக குணமாகும். கண்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
கருவளையம் போக்க
கண்களின் அழகை கெடுப்பதில் கருவளையத்திற்கு பங்குண்டு. அதிக நேரம் கண்விழிப்பதும், கணினி, தொலைக்காட்சி பார்ப்பதினாலும் கருவளையம் ஏற்படும். அதேபோல் மங்கலான வெளிச்சத்தில் படிப்பதால் கண்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துகின்றது. அதன் காரணமாக கண் சிவப்பதுடன் கரு வளையமும் உண்டாகலாம்.
வெள்ளரிக்காயை வட்டமாக கட் செய்து கண்களின் மீது வைக்கவும். அதேபோல் உருளைக்கிழங்கும் கருவளையத்தைப் போக்கும்.கருவளையத்தை போக்க 2 அல்லது 3 துளி எலுமிச்சைச் சாறை ஐஸ் போன்று குளிர்ந்த பாலில் சேர்த்து பஞ்சில் நனைத்து கண்களின் மேல் 15 நிமிடம் வைத்திருப்பது.
சோர்வை விரட்டுங்க
தொலைக்காட்சி பார்க்கும் போது அதிக இடைவெளி விட்டு பார்க்கவும், அதேபோல் இரவு நன்றாக உறங்கவும்.
பணிபுரியும் இடங்களில் கணினி முன் நேராக அமர்ந்து வேலை செய்வதால் கண்கள் களைப்படையாமல் இருக்கும் அதேபோல் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறையும் கண்களை வேறு பக்கம் பார்த்து ஒரு நிமிடம் ரிலாக்ஸ் செய்யவும்.
கணினி முன் அமர்ந்து கண்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம், அது கண்களை உலர்வடையச் செய்யும். அடிக்கடி கண்களை இமையுங்கள், அது கண்களின் ஈரப்பதத்தை தக்கவைக்கும்.
குடை அவசியம்
வெயிலில் வெளியே அலைய வேண்டிய வேலை இருந்தால் குடை எடுத்துப் போங்கள். வெயிலில் வெளியே செல்ல வேண்டியிருந்தால் ‘கூலிங் க்ளாஸ்’ அணியவும். ஏனெனில் வெயிலில் கண்களில் எற்படும் கூச்சத்தால், கண்களுக்குக் கீழே சுருக்கங்கள் ஏற்படலாம்.
கண்களுக்கு ஒத்தடம்
வெது வெதுப்பான நீரில் காட்டன் துணிகளை நனைத்து அவ்வப்போது கண்களுக்கு ஒத்தடம் கொடுங்கள். இது கண்களை ரிலாக்ஸ் ஆக்கும்.
பேக் வேண்டாம்
‘ஃபேஸ்பேக்’ மற்றும் ‘அஸ்டிரின்ஜென்ட்’ கண்களைச் சுற்றி போடக் கூடாது. அவை காய்ந்த பின் அந்த இடத்தில் உள்ள தோலை இழுத்து சுருக்கத்தை ஏற்படுத்தும். கண்களுக்குக் கீழே உள்ள சருமம் மிகவும் மென்மையானதால் அதை இழுத்து விடுவதோ, தேய்ப்பதோ கூடாது. இப்படி முரட்டுத்தனமான காரியங்கள் செய்தால் சுருக்கங்கள் ஏற்படலாம்.
அதேபோல் மேக்கப்பை கலைக்கும் போது கண் பகுதியில் மெதுவாக ரிமூவரை பயன்படுத்துங்கள். 10 நொடிகள் கழித்து ஈரமான பஞ்சைக் கொண்டு துடைத் தெடுக்கவும். ஈரப்பஞ்சை கண்களில் மெதுவாக வைத்து கீழிருந்து மேலாக தேய்க்கவும். கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது.



Click it and Unblock the Notifications