Latest Updates
-
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா?
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: மார்ச் மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க
Malavya Rajyog 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 26 நாட்கள் வரை இருப்பார்.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பான நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல செழிப்பான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார். மேலும் சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதோடு சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட ராசியில் இருக்கும் போது சுப யோகங்களை உருவாக்கி, கூடுதலாக சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துவார்.

அந்த வகையில் சுக்கிரன் மார்ச் மாதத்தில் குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசி சுக்கிரனின் உச்ச ராசியாகும். இந்த மீன ராசிக்குள் சுக்கிரன் நுழைவதால், சக்தி வாய்ந்த மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பத்துடன், ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
வேத நாட்காட்டியின் படி, செல்வத்தின் காரணியான சுக்கிரன் மார்ச் 02 ஆம் தேதி நுழைந்து, மார்ச் 26 ஆம் தேதி வரை இருப்பார். அதோடு இந்த மீன ராசியில் ஏற்கனவே சனி பகவான் உள்ளார். இதனால் சுக்கிரன் மற்று சனி ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். இப்போது மீன ராசிக்கு செல்லும் சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் குவியும்.
பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். பணியிடத்தில் இலக்குகளை அடைவார்கள். அன்புக்குரியவரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் உள்ள நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பண வரவு அதிகரிக்கும்.
புதிய வருமானத்தை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மன அமைதி அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சுக்கிரனின் அருளால் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் உருவாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












