Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
30 ஆண்டுகளுக்கு பின் சனி சூரியனால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Navpancham Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி அல்லது அதன் நிலைகளால், சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் நவகிரகங்களின் நிலைகளால் ராஜயோகங்கள் உருவாகும்.
அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான், தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஜூலை 17 ஆம் தேதி சந்திரனின் கடக ராசிக்குள் நுழைந்தார். இதனால் சூரியன் மற்றும் சனி பகவானின் நிலையால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது.

பொதுவாக சூரியனும், சனியும் தந்தை மகனாக இருந்தாலும், இவ்விரு கிரகங்களும் எதிரிகளாக கருதப்படுகின்றனர். இருப்பினும் இந்த இரண்டு கிரகங்களினால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகமானது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைத்து, திடீர் செல்வத்தையும், தொழிலில் முன்னேற்றத்தையும் தரப் போகிறது. இப்போது சனி சூரியனால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனி சூரியனால் உருவாகியுள்ள நவபஞ்ச ராஜயோகமானது வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி சூரியனால் உருவாகியுள்ள நவபஞ்ச ராஜயோகமானது அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். இதன் மூலம் பேச்சால் பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். தொழிலதிபர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் போட்டியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனி சூரியனால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் பலவிதங்களில் சாதகமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். குடும்பத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். ஜோதிடம், ஆன்மீகம், ஊடகம் அல்லது வணிகத்துடன் தொடர்புடையவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications