Latest Updates
-
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
வாஸ்து படி இந்த செடிகளில் ஒன்றை உங்கள் வீட்டில் வளர்த்தால் பணமும், அதிர்ஷ்டமும் தேடிவருமாம் -
சந்திரன்-சுக்கிரனால் உருவாகும் அரிய லட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க டேஸ்ட் தரமா இருக்கும்
கனவு சாஸ்திரத்தின் படி இந்த 5 விலங்குகளில் ஒன்று கனவில் வந்தால் அதிர்ஷ்டம் உங்களை தேடிவருதுனு அர்த்தமாம்...!
நம் அனைவருக்குமே தூங்கும் போது நிச்சயம் கனவுகள் வரும். கனவுகள் என்பது நம் நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடைய சம்பவங்களின் நீட்சியாகும். பெரும்பாலான கனவுகள் கண் விழித்தவுடன் மறைந்து விடும். ஆனால் சில கனவுகள் மட்டும் மறக்காமல் இருக்கும். அப்படி சில கனவுகள் மட்டும் மறக்காமல் இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளது. சில கனவுகள் கடந்த காலத்தை நினைவுபடுத்துவதாக இருக்கும், ஆனால் சில கனவுகள் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கூறும் அறிகுறிகளாக இருக்கும்.
கனவு சாஸ்திரத்தின் படி, கனவில் சில விஷயங்களைப் பார்ப்பது வரவிருக்கும் அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக இருக்கும். அதேசமயம் சில விஷயங்கள் கனவில் பார்ப்பது அசுபமான கருதப்படுகிறது. குறிப்பாக சில விலங்குகளை கனவில் பார்ப்பது வாழ்க்கையில் வரவிருக்கும் சுப நிகழ்வுகளின் அறிகுறியாக இருக்கலாம். இந்த விலங்குகளை கனவை பார்ப்பது உங்கள் வாழ்க்கையில் ஏதோ சுப நிகழ்வு நடக்கபோவதைக் குறிக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த விலங்குகளை கனவில் பார்ப்பது அதிர்ஷ்டம் என்று தெரிந்து கொள்ளலாம்.

பசுவை கனவில் பார்ப்பது
இந்து மதத்தில் பசு மாடு என்பது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. கனவில் பசுவைப் பார்ப்பது என்பது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் கனவாக கூறப்படுகிறது. பசு மாடு லட்சுமி தேவியின் வடிவமாகக் கருதப்படுகிறது, இது நிதி ஆதாயத்தைக் குறிக்கிறது. கனவில் யானையைப் பார்ப்பதும் மிகவும் அதிர்ஷ்டமானதாகும், குறிப்பாக யானை குளிப்பதைப் போல கனவு வருவது, பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வருவதைக் குறிக்கிறது.
பாம்பை கனவில் பார்ப்பது
பாம்புகள் நிஜ வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான உயிரினமாக இருக்கலாம், ஆனால் கனவு சாஸ்திரத்தில் பாம்புகளைப் பார்ப்பது எப்போதும் மோசமானது அல்ல, சொல்லப்போனால் அது மிகவும் அதிர்ஷ்டமானது. தங்க நிற அல்லது அமைதியான நாகப்பாம்பை கனவில் பார்ப்பது வரப்போகும் செல்வத்தைக் குறிக்கிறது. அது அமைதியாக வெளியேறினால், உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கப்போகிறது என்று அர்த்தம்.
மீனை கனவில் பார்ப்பது
இந்து மதத்தில் மீன்களும் லட்சுமி தேவியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. ஆரோக்கியமான நீச்சல் அடிக்கும் மீனைப் பார்ப்பது வணிக லாபத்தையும், குடும்ப மகிழ்ச்சியையும் குறிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. அதேசமயம் இரண்டு மீன்கள் ஒன்றாக இருப்பது போல கனவு வருவது திருமணத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிப்பதையும் குறிக்கலாம்.
குதிரையை கனவில் பார்ப்பது
கனவு சாஸ்திரத்தின் படி, கனவில் குதிரையைப் பார்ப்பது வெற்றியையும், அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது. வெள்ளைக் குதிரையில் சவாரி செய்வது போன்ற கனவு உங்கள் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது. புறாக்கள் அல்லது அன்னங்கள் போன்ற பறவைகள் கனவில் வருவது அமைதி, நல்ல செய்தி மற்றும் நிதி முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.
சிங்கம் அல்லது புலியை கனவில் பார்ப்பது
கனவில் சிங்கம் அல்லது புலி வந்தால் தலைமைப்பதவியும், பொறுப்புகளும் கிடைக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல நடனமாடும் மயில் வந்தால் கனவு வந்தால் அதிர்ஷ்டம் உங்களை தேடிவருகிறது என்று அர்த்தம். அதேசமயம் உங்கள் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் கிரக நிலைகளைப் பொறுத்து கனவு பலன்கள் மாறுபடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












