Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
நவம்பர் இறுதியில் நடக்கும் சனி பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையே மாறப்போகுது...
Saturn Retrograde Ends On 28 November 2025: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில் ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியவர்.
இந்த சனி பகவான் தற்போது குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் ஜூன் 13 முதல் வக்ர நிலையில் பின்னோக்கி பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் நவம்பர் மாத இறுதியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

முக்கியமாக வக்ர நிலையில் இருந்த சனியால் இதுவரை வாழ்க்கையில் சிரமங்களை சந்தித்து வந்தால், அது நவம்பர் 28 முதல் முடிவுக்கு வரும். மொத்தத்தில் சனி பகவானின் பரிபூர்ண ஆசியால் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது நவம்பரில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் குறைந்து, பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இதுவரை சண்டைகளை சந்தித்து வந்தால், அது முடிவுக்கு வந்து, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். பேச்சு இனிமையாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். முக்கியமாக நவம்பர் 28 ஆம் தேதி முதல் பல வழிகளில் இருந்து பணம் தேடி வருவதைக் காண்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் வேகம் பெறும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நவம்பர் 28 முதல் அலுவலகத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பழைய கடன்கள் தீரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் நவம்பர் 28-க்கு பின் பொற்காலமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் நவம்பர் 28 முதல் சனி பகவான் உங்கள் வாழ்க்கையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்த சண்டைகள் நீங்கும். தாமதமான வேலைகள் வேகமாக நடக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். நிதி நிலை வலுவடையும். கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். வக்ர காலத்தில் அஷ்டம சனியால் சந்திக்கும் பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். ஆனால் நவம்பர் 28 முதல் அந்த நிலைமை மாறும். வேலை தொடர்பான பயணங்கள் வெற்றியைத் தரும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். செல்வம் குவியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் எழும். கடந்த 4 மாதங்களால் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். மொத்தத்தில் சனியின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications