Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
சனி-புதனின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புயலடிக்க போகுதாம்..உங்க ராசி இதுல இருக்கா
ஜூலை மாதம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல கிரகங்கள் பிறகு தங்கள் நிலையை மாற்றுகின்றன. சனி மற்றும் புதன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பின்னோக்கிச் செல்லும் இரண்டு முக்கியமான கிரகங்களாகும். இந்த கிரக பெயர்ச்சியில் காரணமாக, 25 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும், அதேசமயம் சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமாக இருக்கும்.
ஜோதிட கணிப்புகளின் படி, சனி 138 நாட்கள் பிற்போக்கு நிலையில் இருந்து ஜூலை 13, 2025 அன்று தனது நிலையை மாற்றுகிறது. சனி மற்றும் புதனின் வக்ர பெயர்ச்சி காரணமாக, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படப் போகிறது. இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் இல்லையெனில் சில இழப்புகளையும், ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும்.

சனி மற்றும் புதனின் வக்ர பெயர்ச்சி
ஜூலை 13, 2025 அன்று, மீன ராசியில் சனிபகவான் 07:24 மணிக்கு வக்ரமாகிறார். நவம்பர் 28, 2025 வரை அதே நிலையில் நீடிப்பார். அதேபோல ஜூலை 18 அன்று, கடக ராசியில் புதன் 09:45 மணிக்கு வக்ரமாகிறது. அது ஆகஸ்ட் 11, 2025 வரை அந்த நிலையில் இருக்கும். இந்த இரண்டு கிரக பெயர்ச்சிகள் சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமான காலத்தை வழங்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
துலாம்
ஜூலை 2025 இல் சனி-புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், துலாம் ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், மேலும் அலுவலகத்தில் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில், விரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, மேலும் வாழ்க்கைத்துணையுடன் ஏற்படும் சிக்கல்களை பொறுமையாகக் கையாள வேண்டும். அதைத் தவிர, அலுவலகத்தில் வேலையை முடிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம், எனவே இந்த காலகட்டத்தில் பெரிய திட்டங்களை தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
அவர்கள் தங்கள் வேலையில் பொறுமையுடனும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் தங்கள் படிப்பில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்கள் சில உடல்நல பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும், எனவே, குறிப்பிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வக்ர நிவர்த்தி காலம் முழுவதும் முடிவுகளைப் பெற சுகாதாரத் திட்டத்தை துல்லியமாகப் பின்பற்றுங்கள்.
விருச்சிகம்
சனி-புதன் வக்ரநிலை விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை வழங்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் தொடர்பு மற்றும் பகுப்பாய்வு திறன்கள் எதிர்மறையாக பாதிக்கப்படலாம். அவர்களின் தொழில் வாழ்க்கையில் புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். பிரச்சினைகளைத் தவிர்க்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.
அவர்களின் காதல் வாழ்க்கையில் பல்வேறு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், அவர்களுடன் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. நீண்ட காலமாக நீங்கள் ஏதேனும் பெரிய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தால், இந்த காலகட்டத்தில் அது மேலும் தீவிரமாக வாய்ப்புள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
சனி-புதன் வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு தொந்தரவான காலகட்டத்தை வழங்கப்போகிறது. சனியின் சஞ்சாரம் காரணமாக அவர்கள் ஏற்கனவே சதேசாதி காலத்தை கடந்து வருகின்றனர், மேலும் வக்ர பெயர்ச்சியால் அவர்கள் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். லாபத்திற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதால், இது முதலீடுகளுக்கான நேரமல்ல. இந்த காலகட்டத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது, மேலும் நிபுணர்களுடன் கவனமாக கலந்தாலோசித்த பின்னரே எந்தவொரு முடிவையும் எடுப்பது நல்லது.
உங்கள் வேலையில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும், கடினமாக உழைக்க தயாராக இருக்க வேண்டும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது அல்லது உயர் திறன்களைப் பெறுவது மக்கள் பிரச்சனையான காலகட்டத்தை சமாளிக்க உதவும். இந்த காலகட்டத்தில் சின்ன சின்ன ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












