Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது..
Navpancham Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒரே ராசியில் ஒன்றிணைந்தோ அல்லது அதன் நிலைகள் மற்றும் அம்சத்தினாலோ யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மனித வாழ்க்கையில் காணப்படும்.
அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இவர் அக்டோபர் மாதத்தில் கடக ராசிக்கு செல்லவுள்ளார். கடக ராசியானது குரு பகவானின் உச்ச ராசியாகும். மறுபுறம் நீதிமான் சனி பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார்.

இதனால் அக்டோபரில் நடக்கும் குரு பெயர்ச்சியால் சனி மற்றும் குருவின் நிலைகளால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இந்த ராஜயோகம் உருவாவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதுவும் சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் திடீர் செல்வத்தையும், முன்னேற்றத்தையும் காண வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். இப்போது சனி மற்றும் குருவால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் சிறப்பான பலன்களைத் தரும். ஏனெனில் குரு இந்த ராசியின் லக்ன வீட்டில் இருப்பார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் மிகவும் பிரபலமாவீர்கள். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். திருமணமானவர்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சொந்தமாக தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரலாம். முக்கியமாக பணிபுரிபவர்களின் செயல்திறன் இக்காலத்தில் மேம்படும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகமானது அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலை வெற்றிகரமாக முடிவடையும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு நவபஞ்சப ராஜயோகமானது பலவிதமான நன்மைகளைத் தரப்போகிறது. குறிப்பாக புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதலித்து வந்தால் அந்த காதல் திருமணம் வரை செல்லலாம். மேலும் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பணிபுரிபவர்களுக்கு நண்பர்களின் உதவியான நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











