Latest Updates
-
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம்
30 ஆண்டுக்கு பின் சனிபகவான் உருவாக்கும் கேந்திர திரிகோண யோகத்தால் இந்த 2 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க
சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாவார். சனிபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறை பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறை பலன்களையும் வழங்குகிறது. ஜோதிட கணிப்புகளின் படி, சனி உருவாக்கிய கேந்திர திரிகோண ராஜ யோகம் தற்போது ஜோதிடத்தில் சில ராசிகளின் அதிர்ஷ்டத்தை மாற்றப் போகிறது.
இந்த ராஜ யோகம் பெரும்பாலும் சனி உட்பட ஏழு கிரகங்களால் ஏற்படும் தீமைகளை எதிர்த்துப் போராடவும், நல்ல பலன்களை வழங்கவும் உதவுகிறது. மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாக இருப்பதால், சனி வாழ்க்கையில் அதிக செல்வாக்கை செலுத்துகிறது. சனி ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறார். இந்த நேரத்தில், சனி 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

தற்போது, சனிபகவான் மீன ராசியில் இருக்கிறார். ஜூலை 13 ஆம் தேதி முதல் சனிபகவான் வக்ர நிலையில் நகரப் போகிறார். இது சில ராசிகளில் கேந்திர திரிகோண ராஜயோகத்தையும் உருவாக்குகிறது. 12 ராசிகளில், இரண்டு ராசிகள் சனிபகவான் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகத்தின் பலன்களை அனுபவிக்கக் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம் ஐந்தாம் வீட்டில் உருவாக்கப்படுகிறது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். மேலும், ஐந்தாம் வீடு என்பது அன்பு, குழந்தைகள் மற்றும் கல்வியைக் குறிக்கிறது. இந்த நேரத்தில், அவர்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் உருவாகப்போகிறது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பொருளாதாரரீதியாகவும் இந்த நிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதி நிலைமையும் மேம்படும். அவர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான காலகட்டத்தை அனுபவிக்க முடியும்.
சிங்கிளாக இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பொருத்தமான துணை கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் அனைத்து வகையான நன்மைகளையும் அடையும் நேரமிது. காதலில் இருப்பவர்களுக்கு இது ஒரு சாதகமான காலகட்டமாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு இந்த காலகட்டம் பொருத்தமானதாக இருக்கும். பெரிய ஆரோக்கிய பிரச்சினைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண யோகத்தால் பல நேர்மறையான மாற்றங்கள் காத்திருக்கின்றன. சனிபகவானின் வக்ர இயக்கத்தால் தனுசு ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்களின் அனைத்து முயற்சிகளும் இப்போது வெற்றியைக் கொடுக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் காண்பார்கள். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். தொழிலதிபர்களுக்கு இது சிறந்த நேரம். அவர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பெரிய லாபத்தை ஈட்டலாம். இதுவரை நிலவி வந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்வின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவார்கள், மேலும் அவர்கள் கடின உழைப்பிற்கான பலனை இரட்டிப்பாகப் பெறுவார்கள். அவர்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியம் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு, இது மிகவும் சாதகமான நேரம். எதிரிகளை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்ட இது சரியான நேரம். வீடு கட்ட தொடங்குவதற்கும், பெரிய நிதி லாபத்தைத் தேடுவதற்கும் இது சிறந்த காலகட்டமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












