Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் நீங்கி, அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
Saturn Direct Make Vipreet Rajyog 2025 After 30 Years: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் கிரகங்களிலேயே சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. இந்த சனி ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் இருப்பார். இதனால் இவர் மீண்டும் ஒரு ராசிக்கு வர 30 ஆண்டுகள் ஆகும். இந்த சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
இந்த வக்ர கதியில் சனி பகவான் நவம்பர் வரை இருப்பார். அதன் பின் வக்ர நிவர்த்தி அடைந்து மீன ராசியில் பயணிப்பார். இப்படி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையும் போது விபரீத ராஜயோகம் உருவாகவுள்ளது. சிம்ம ராசியில் உருவாகும் விபரீத ராஜயோகத்தால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

பொதுவாக விபரீத ராஜயோகமானது ஒரு ஜாதகத்தின் 6, 8 அல்லது 12 ஆவது வீட்டின் அதிபதி, 6, 8 அல்லது 12 ஆவது வீட்டில் இருக்கும் போது விபரீத ராஜயோகம் உருவாகும். அந்த வகையில் சிம்ம ராசியில் 6 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 8 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். இதனால் விபரீத ராஜயோகமானது உருவாகியுள்ளது.
இந்த ராஜயோகத்தால் எதிர்பாராத விதமாக ஒருவருக்கு அதிர்ஷ்டம், செல்வாக்கு, மற்றும் அதிகாரம் கிடைக்கும். மேலும் ஒருவரது வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் நீங்கி, செல்வம், அதிகாரம், மற்றும் புகழ் போன்றவை கிடைக்கும். இப்போது சனியால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் நவம்பர் முதல் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 6 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 8 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தால் வாழ்வில் பல பகுதிகளில் நன்மைகளைத் தரப்போகிறது. நீண்ட கால போராட்டங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சாதனைகளைப் புரிவீர்கள். முக்கியமாக சனியின் பார்வை கர்ம பாவத்தில் விழுவதால், வேலையில் அசாதாரண பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மிதுனம்
விபரீத ராஜயோகமானது மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகளைத் தரப் போகிறது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிரிகளை வீழ்த்துவீர்கள். ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications