Latest Updates
-
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்கள் பொய் சொல்வதில் கில்லாடிகளாம்... இவர்களின் பொய்யை யாராலும் கண்டுபிடிக்க முடியாது!
மனிதராக பிறந்த அனைவருமே நிச்சயம் பொய் சொல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். பொய் சொல்வது என்பது ஒரு மனித இயல்பு.பொய் என்பது நீங்கள் ஒரு மோசமான சூழ்நிலையில் சிக்குவதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளவோ அல்லது யாரையாவது ஏமாற்றவோ பொய் சொல்லியிருக்கலாம். எல்லோரும் பொய் சொல்பவர்களாக இருந்தாலும் அதை மாட்டிக்கொள்ளாமல் சொல்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு ஒரு தனித்திறமை வேண்டும்.
சிலர் சாதாரணமான பொய் சொன்னால் கூட சில நிமிடங்களில் மாட்டிக் கொள்வார்கள், மாறாக சிலர் எவ்வளவு பெரிய பொய்யை சொன்னாலும் அதிலிருந்து சாமர்த்தியமாக வெளிவருபவர்களாக இருப்பார்கள். புத்திசாலித்தனமாக பொய் சொல்வதில் அவர்கள் மிகப்பெரிய கில்லாடிகளாக இருப்பார்கள். ஜோதிடத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்கள் மாட்டிக்கொள்ளாமல் பொய் சொல்லும் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மே
மே மாதத்தில் பிறந்தவர்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர், இது ஆச்சரியமல்ல. தகவல்தொடர்பு கிரகமான புதனால் ஆளப்படும் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பொய் சொல்வதில் நிபுணர்கள். அவர்கள் சொல்லும் பொய்யை அவர்களைத் தவிர யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களின் கூர்மையான புத்திசாலித்தனமும் பேச்சாற்றலும், உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான கோடுகளை எளிதில் மங்கச் செய்யும் பொய்களை உருவாக்குவதில் அவர்களைத் திறமையானவர்களாக ஆக்குகின்றன.
அவர்களின் இயல்பில் உள்ள இரட்டைத்தன்மை, அவர்களை பொய்களுக்கும், உண்மைகளுக்கும் இடையில் மாறிக்கொள்ளநொடிக்கு நொடி மாற வழிவகுக்கிறது. அவர்களின் அபாரமான நினைவாற்றல் அவர்கள் என்னென்ன பொய் சொன்னார்கள் என்பதை அவர்களுக்கு எப்போதும் நினைவூட்டும். இதனால் எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் அவர்கள் தங்களின் பொய்யில் உறுதியாக நிற்பார்கள்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் திட்டமிடலும், முன் கணிப்பும் மிக்கவர்கள், இதனால் அவர்கள் நேர்மையற்றவர்களாக இருக்க முடிவு செய்யும்போது அவர்கள் பொய் சொல்வதில் நிபுணர்களாக மாறுகிறார்கள். மே மாதத்தில் பிறந்தவர்கள் போல அவர்கள் தன்னிச்சையாக பொய் கூற மாட்டார்கள், தங்கள் ஏமாற்று வேலைகளை கவனமாகத் திட்டமிடுவார்கள், சாத்தியமான ஒவ்வொரு விளைவையும் கருத்தில் கொண்டு பல்வேறு சூழ்நிலைகளுக்கு பதில்களை முன்கூட்டியே திட்டமிடுவார்கள்.
அவர்கள் ஒரு பொய்யை சொல்லும் போது அதுதான் உண்மை என்று மற்றவர்களை மட்டுமல்ல அவர்களே நம்புவார்கள். அவர்கள் மனித உணர்வுகளைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்டவர்கள். எனவே யாரிடம், எப்படி, எது மாதிரியான பொய்களை கூற வேண்டும் என்று நன்கு அறிவார்கள்.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் நியாய உணர்வு கொண்டவர்களாகவும், ஒற்றுமையை பரப்புபவர்களாகவும் இருப்பார்கள். அதனால் அவர்கள் பொய் சொல்லவே மாட்டார்கள் என்று அனைவரும் கருதுவார்கள். அவர்களின் இராஜதந்திர குணம் உண்மையில் அவர்களை வெள்ளைப் பொய்களையும் அரை உண்மைகளையும் சொல்வதில் மிகவும் திறமையானவர்களாக மாற்றுகிறது. அமைதியைக் காப்பதற்கும் மோதல்களைத் தவிர்ப்பதற்கும் அவர்கள் சில உண்மைகளை பெரும்பாலும் வெளிப்படையாகக் கூறமாட்டார்கள்.
அவர்களின் பொய்களை நம்பும்படியாக மாற்றுவது அவர்களின் வசீகரமும் அனைவரையும் கவரும் தன்மையும்தான். அவர்கள் இனிமையாகவும் அக்கறையுடனும் இருப்பதால், மக்கள் இயல்பாகவே அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறார்கள். அவர்கள் கேட்பவர் என்ன கேட்க விரும்புகிறாரோ அதற்குச் சரியாகப் பொருந்தக்கூடிய பொய்களை உருவாக்குவதில் நிபுணர்களாக இருப்பார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
