Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் ஆபத்தான சுயநலவாதிகளாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் என்ன?
சுயநலமாக இருப்பது என்பது எப்போது மோசமானதல்ல. ஏனெனில் சுயநலம் என்பது ஒருவரின் சுய பாதுகாப்பு, சுதந்திரம் அல்லது குறிக்கோளின் வலுவான உணர்வையும் பிரதிபலிக்கும். சிலர் தங்கள் இலக்குகளிலும், தனிப்பட்ட நன்மைகளிலும் கூடுதல் கவனம் செலுத்துவதால் அவர்கள் மற்றவர்களின் நன்மைகளை புறக்கணிக்க வழிவகுக்கலாம்.
அனைவருக்குள்ளேயும் சுயநல எண்ணங்கள் இருக்கத்தான் செய்யும், ஆனால் சிலரிடம் இந்த குணம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்களிடம் இந்த சுயநல எண்ணங்கள் அதிகமாக இருக்கும். அவர்கள் தங்களின் சுயநலத்திற்காக மற்றவர்களுக்கு துரோகம் செய்யவோ அல்லது அவர்களின் காலை வாருவதற்கோ தயங்க மாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஆபத்தான சுயநலவாதிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் அச்சமற்ற, உணர்ச்சிவசப்படக்கூடிய மற்றும் துரிதமாக செயல்படும் தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். ஆனால் அவர்களின் துணிச்சலான ஆளுமை பெரும்பாலும் மனக்கிளர்ச்சி மற்றும் சுயநல நடத்தையாக மாறும். அவர்கள் பெரும்பாலும் ஒரு குழுவாக வெற்றி பெறுவதை விட தனியாக வெற்றி பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதனால் அவர்கள் மற்றவர்களின் தேவைகளை புறக்கணிக்கலாம்.
அவர்களின் போட்டித்தன்மை அவர்களை தங்களின் ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வைக்கிறது. அவர்கள் பெரும்பாலும் முதலில் செயல்படுகிறார்கள், பின்னர் சிந்திக்கிறார்கள், இந்த வேகமான செயல்பாடுகளில் அவர்கள் மற்றவர்களை தெரிந்தோ, தெரியாமலோ காயப்படுத்துவார்கள். அவர்களின் நோக்கங்கள் எப்போதும் தவறானதாக இல்லாவிட்டாலும், அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக அவர்கள் மற்றவர்களின் ஆசைகளை தவிர்க்கலாம்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் பிரகாசிக்க விரும்புகிறார்கள். அவர்கள் கவனத்தையும், போற்றுதலையும், விசுவாசத்தையும் விரும்புகிறார்கள். அவர்கள் தாராள மனப்பான்மை மற்றும் அரவணைப்புக் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களின் ஈகோ அவர்களை ஆபத்தான சுயநலவாதிகளாக மாற்றலாம். அனைவரும் பாராட்ட வேண்டும் என்ற அவர்களின் வலுவான ஆசை பெரும்பாலும் அவர்களின் தேவைகளையும் அங்கீகாரத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாக உணர வைக்கிறது.
அவர்கள் அனைத்தும் தங்கள் விருப்பப்படி நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள், மேலும் விஷயங்கள் தங்கள் விரும்பியபடி நடக்காதபோது அதை தங்களுக்கு வேண்டிய விதத்தில் மாற்ற எதையும் செய்வார்கள். பாராட்டு மற்றும் போற்றத்தலுக்கான இந்த தீவிரத் தேவை அவர்களை ஆபத்தான சுயநலவாதிகளில் ஒருவராக மாற்றுகிறது. அவர்கள் தங்களின் சொந்த தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன்தான் மற்றவர்களைப் பற்றி சிந்திக்கவே தொடங்குவார்கள்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகள் மற்றும் தந்திரமாக செயல்படுவார்கள். அவர்கள் வசீகரமானவர்கள் மற்றும் விரைவான புத்திசாலிகள் என்றாலும், அவர்கள் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாகவும், சுயநலவாதிகளாகவும் இருக்கலாம். அவர்களின் அடிக்கடி மாறும் மனநிலை மற்றும் உணர்ச்சியற்றத் தன்மை அவர்களை நம்பமுடியாத அளவிற்கு தங்கள் நன்மைகளை முன்னிலைப்படுத்துபவர்களாகவும், சுயநலவாதிகளாகவும் காட்டுகின்றன.
அவர்கள் சுயநலவாதிகளாக இருக்க காரணம் அவர்களின் கணிக்க முடியாத நடத்தை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் போக்குமாகும். அவர்கள் திட்டங்களில் இருந்து பின்வாங்கலாம் அல்லது கருத்துக்களை விரைவில் மாற்றிக் கொள்ளலாம், இதனால் அவர்களின் நம்பகத்தன்மை பெரிதும் குறைகிறது. அவர்கள் தங்கள் நன்மைகள் மீது செலுத்தும் கவனத்தால் மற்றவர்களின் தேவைகளை அலட்சியப்படுத்தலாம்.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இலக்கை நோக்கிய ஒழுக்கமான மற்றும் எதார்த்த அணுகுமுறையைக் கொண்டவர்கள். மகர ராசிக்காரர்கள் பெரும்பாலும் வெற்றியில் கவனம் செலுத்துவதால், அவர்கள் தற்செயலாக மற்றவர்களின் உணர்ச்சிகளையோ அல்லது தேவைகளையோ புறக்கணிக்கிறார்கள். அவர்களின் வேலை மீதான வெறித்தனமான போக்குகள் மற்றும் அங்கீகாரத்திற்கான ஆசை அவர்களை சுயநலவாதிகளாக மாற்றலாம்.
அவர்கள் சுயநலவாதிகளாக காரணம் அவர்களின் இலக்குகள் மீது அவர்களுக்கு இருக்கும் பேராசைதான். அவர்கள் தங்கள் வாழ்க்கையை இலக்குகளின் அடிப்படையில் வழிநடத்துகிறார்கள், அவர்கள் மற்றவர்கள் மீது இரக்கம் காட்டுவதை விட தங்கள் நலனில் அக்கறை செலுத்துகிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












