Latest Updates
-
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
Numerology: வெற்றி ஒருவருக்கு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. என்ன தான் சிலருக்கு வெற்றி முயற்சிக்காமலேயே கிடைத்துவிட்டாலும், இன்னும் சிலர் எவ்வளவு தான் கடினமாக முயற்சித்தாலும், தோல்வியையே பெறுவார்கள். ஆனால் தோல்வியடைந்துவிட்டால் அதற்காக மனம் தளரக்கூடாது. ஏனெனில் சிலருக்கு வெற்றியானது குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பின்னரே கிடைக்கும். இதற்கு அவர்களின் பிறந்த தேதி ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் 35 வயதிற்கு மேல் தான் பெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் எப்போது வெற்றி பெற்றாலும் வெற்றி என்பது வெற்றி தான். இப்போது நியூமராலஜி படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் தனது 35 வயதிற்கு பின் வெற்றியைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் படைப்பாற்றல் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் திறமை, சுய வெளிப்பாடு ஆகியவற்றை அதிகம் நம்புபவர்கள். இதனால் இவர்களுக்கு உடனடி வெற்றி எதுவும் கிடைக்காது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் 35 வயதை எட்டிய பின்னர் தான் வெற்றி கனியை ருசிப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் அனுபவத்தைப் பெற்ற பின்னரே வெற்றியை அடைவார்கள். அதே சமயம் இந்த வெற்றி நீண்ட காலம் நீடித்திருக்கும்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒருவித மன குழப்பத்துடன் இருப்பார்கள் மற்றும் இருப்பியல் சார்ந்த சோர்வையும் எதிர்கொள்வார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ராகுவால் ஆளப்படுகிறார்கள் மற்றும் இவர்களுக்கு ஆராய்ச்சி, ஆன்மீகம் மற்றும் சுய பரிசோதனை போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். மேலும் இவர்களின் தனித்துவமான பகுப்பாய்வுத் திறன்கள் மற்றும் எதையும் கற்பனைக்கு அப்பால் யோசிக்கும் திறன்களால், 35 வயதிற்கு மேல் பெரும் வெற்றியைப் பெறுவார்கள்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. எண் கணிதத்தின் படி, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் 35 வயதிற்கு மேல் தான் வாழ்வில் பெரும் வெற்றியைக் காண்பார்கள். சனி பகவானால் ஆளப்படும் இவர்கள், ஆரம்பத்தில் வாழ்வில் பல போராட்டங்களை சந்திப்பதோடு, அதை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதன் மூலம் ஞானத்தை பெற்றிருப்பார்கள். எனவே நீங்கள் 20-களில் நிறைய சிரமங்களை சந்தித்தால், நம்பிக்கையை சற்றும் இழக்காமல், உறுதியோடு இருந்து, கடின உழைப்பை கைவிடாமல், ஒழுக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், நிச்சயம் 35-களில் பெரும் வெற்றியைக் காண்பீர்கள்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முழுமை, மனிதநேயம் மற்றும் ஞானத்தின் அடையாளமாக திகழ்பவர்கள். எனவே இத்தகையவர்கள் தங்கள் வாழ்வில் பெரிய அளவில் வெற்றியைக் காண சற்று தாமதமாகலாம். அதுவும் 35 வயதிற்கு மேல் இவர்களின் வெற்றிகளானது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடியதாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

