கன்னியில் உதயமாகும் புதன்: அக்டோபரில் இந்த 3 ராசிக்கு எதிர்பாராத ஜாக்பாட் அடிக்கப்போகுது...

Mercury Rise In Virgo On October 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம், பகுத்தறிவு ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் இவர் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக வேகமாக தனது நிலையை மாற்றக்கூடியவர்.

தற்போது புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் உள்ளார். இந்நிலையில் புதன் அக்டோபர் 03 ஆம் தேதி உதயமாகவுள்ளார். இப்படி புதன் கன்னியில் உதயமாவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும்.

Mercury Rise In Virgo On October 2025 These Zodiac Signs See Unexpected Financial Gains

முக்கியமாக புதனின் இந்த நிலை மாற்றத்தால் 3 ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் நல்ல செல்வத்தைப் பெறவுள்ளனர். அதோடு நீண்ட கால ஆசையும் நிறைவேறும் வாய்ப்புள்ளது மற்றும் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கப் போகிறது. இப்போது கன்னி ராசியில் உதயமாகும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கன்னி

கன்னி ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாவதால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் வசதிகளையும், சொத்துக்களையும் பெறுவார்கள். எதிர்பாராத வழிகளில் இருந்து நிதி ஆதாயங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆடம்பரமான பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புக்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் நல்ல உயரத்தை அடையலாம். உறவினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவடையும். பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வணிகம், மார்கெட்டிங், ஊடகம் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

மகரம்

மகர ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புக்களும் தேடி வரும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசைகள் நிறைவேறும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, September 23, 2025, 9:57 [IST]
Desktop Bottom Promotion