Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்... ரெடியா இருங்க...!
ஜோதிடத்தில் செவ்வாய் போரின் கடவுள் என்று அழைக்கப்படுகிறது. நிலம், பொருள் மற்றும் கோபத்தின் அதிபதியாக செவ்வாய் இருக்கிறார். செவ்வாய் தனது ராசியை அல்லது நட்சத்திரத்தை மாற்றும்போது அது அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் நுழைகிறார்.
இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், மற்ற ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களையும் வழங்கும். கடக ராசிக்கு செவ்வாய் செல்வது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்கப் போகிறது என்பதையும், யாருக்கெல்லாம் நிதி ஆதாயமும் அதிர்ஷ்டமும் கிடைக்கப் போகிறது என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் 20-ஆம் தேதி முதல் அதிர்ஷ்டக் காலம் தொடங்கப் போகிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு செல்வம் மற்றும் பேச்சு தொடர்பான அம்சத்தில் செவ்வாயின் பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயம் வந்து சேரும்.
குடும்பத்தில் பெரியவர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் அதிக லாபத்தை அடையலாம், மேலும் இந்த காலகட்டத்தில் அவர்களின் நிதி நிலை மேம்படும். பரம்பரை சொத்துக்கள் பிரச்சினைகளில் சிக்கியிருந்தால் இப்போது அது முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். ஏனெனில் இந்த ராசி மாற்றம் விருச்சிக ராசியின் ஒன்பதாம் வீட்டில் நிகழும். எனவே இந்த செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களின் நல்ல காலம் தொடங்கப் போகிறது. அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
சொத்துக்களை வாங்குதல் அல்லது விற்பதன் மூலம், பொருளாதார ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. வாகனம் வாங்க விரும்புபவர்களுக்கு இந்தக் காலம் ஏற்றது. இந்த காலம் வியாபாரம் செய்பவர்களுக்கு பெரும் லாபம் தரும் காலமாகும். சுப காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் சுப காலம் தொடங்கும். ஏனெனில் அவர்களின் கர்ம பாவத்தில் இந்த ராசி மாற்றம் நிகழுகிறது. அதனால் அவர்களுக்கு இந்த காலகட்டத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் அனைத்து விதமான நன்மைகளும் அதிர்ஷ்டமும் இருக்கும். வேலை தேடும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரம் செய்பவர்கள் பொருளாதாரரீதியாக லாபம் அடைவதற்கு ஏற்ற காலமாகும். உங்கள் வணிகம் அடுத்த நிலைக்கு உயர வாய்ப்புள்ளது. புதிய தொழில் அல்லது வேலையைத் தொடங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
