Latest Updates
-
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
சந்திர பெயர்ச்சியால் உருவான நீச்சபங்க ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க பண மழையில் நனையப் போறாங்க..
Mars Moon Made Neechbhang Rajyog 2024: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் சந்திரன் குறுகிய நாட்களில், அதுவும் 2 1/2 நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர்.
இந்த சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார். இந்த கடக ராசிக்கு கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் அக்டோபர் 20 ஆம் தேதியில் இருந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் மகர ராசியில் நுழைந்துள்ளார். இதனால் செவ்வாய் மற்றும் சந்திரனின் நிலைகளால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் பண வரவு அதிகரிக்கும். இப்போது நீச்சபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
நீச்சபங்க ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். தொழிலில் புதிய பொறுப்புக்களைப் பெறக்கூடும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகமானது தைரியத்தை அதிகரிக்கும். தன்னம்பிக்கையும், வீரமும் அதிகரிக்கும். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவால் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகமானது மரியாதையையும், கௌரவத்தையும் அளிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்பட்டு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications