Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை!
மகா சிவராத்திரி நாளில் நடக்கும் 3 கிரக பெயர்ச்சிகள்: இந்த 3 ராசிக்கு சிவனின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும்..!
Maha Shivratri 2026: சிவபெருமானுக்கு உரிய மிகவும் விஷேசமான நாள் தான் மகாசிவராத்திரி. என்ன தான் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் விஷேசம் நிறைந்த மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் மகா சிவராதிரி பிப்ரவரி 15 ஆம் தேதி வருகிறது. மேலும் இந்த மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் 3 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
அதில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்திற்கும், மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் மகர ராசிக்கும், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பூரட்டாதி நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளனர். இப்படி 3 கிரகங்களும் ஒரே நாளில், அதுவும் மகா சிவராத்திரி நாளில் தங்களது நிலையை மாற்றுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

இப்படி 3 கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் சிவனின் ஆசியுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறவுள்ளனர். இப்போது மகா சிவராத்திரி நாளில் நடக்கும் 3 கிரகங்களின் பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
மகா சிவராத்திரி நாளில் நடக்கும் 3 கிரகப் பெயர்ச்சிகளால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மன அமைதி கிடைக்கும். நீண்ட காலமாக மனதில் இருந்த அழுத்தம் நீங்கி, மனம் ரிலாக்ஸாக இருக்கும். தொழிலில் இருந்த நிச்சயமற்ற தன்மைகள் நீங்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிவனின் அருளால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பண பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலைமை மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதாரணமாக இருக்கும். காதல் வாழ்க்கை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
கடகம்
மகா சிவராத்திரி நாளில் நடக்கும் 3 கிரக பெயர்ச்சிகளால் கடக ராசிக்காரர்கள் உறவுகள் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பெருகும் மற்றும் தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலைமை எதிர்பார்த்ததை விட வலுவாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
மகா சிவராத்திரி நாளில் நடக்கும் 3 கிரக பெயர்ச்சிகளால் துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். பணிபுரிபவர்கள் சிவனின் அருளால் கடின உழைப்புக்கான முழு பலனையும் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுப் பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வாழ்க்கையில் இருந்த இருள் நீங்கி, சிவனின் ஆசியால் வாழ்க்கை பிரகாசிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


