Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய கேது-சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
Ketu Venus Conjunction 2025 In Leo After 18 Years: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகங்களாக ராகு மற்றும் கேது கருதப்படுகின்றன. இதில் ராகு தற்போது கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பயணித்து வருகின்றனர். இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார்கள். இதனால் சனி பெயர்ச்சிக்கு அடுத்தப்படியாக, ராகு கேது பெயர்ச்சியின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் ஆழமாக தெரியும்.
மேலும் கிரகங்களில் இவ்விரு கிரகங்களுக்கும் சொந்த ராசிகள் ஏதும் இல்லை. இந்நிலையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருவதால், சிம்ம ராசியில் கேது-சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இவ்விரு கிரகங்களும் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை அதிர்ஷ்டமானதாக, நிதி நிலையில் நல்ல உயர்வைத் தரக்கூடியதாக, தொழிலில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கப் போகிறது. இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் நிகழும் அரிய கேது-சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. மேலும் இக்காலத்தில் தொழில் ரீதியாக நல்ல வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படப் போகிறது. அதோடு நிதி நிலையிலும் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. வங்கி இருப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதோடு சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக்கூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இது தொழில் வீடு என்பதால், தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படப் போகிறது. தொழிலதிபர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீண்ட காலமாக திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கப் போகிறது. மேலும் நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தந்தையுடனான உறவு வலுவடையும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலதிபர்களின் நிதி நிலைமை வலுவடையும். இக்காலத்தில் செய்யும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications