18 ஆண்டுகளுக்கு பின் சிம்மத்தில் ஒன்றிணையும் கேது-புதன்: இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..

Ketu Mercury Conjunction In Leo After 18 Years: வேத ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கவும் செய்கின்றன. இதன் விளைவு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார்.

இந்த புதன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான கேது பயணித்து வருகிறார். இந்த சிம்ம ராசிக்கு கேது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். இதனால் சிம்ம ராசியில் கேது மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது.

Ketu Mercury Conjunction In Leo After 18 Years These Zodiac Signs Will Be Lucky

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

தனுசு

தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் கேது புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களை தரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய கூட்டாளர்கள் கிடைக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டில் கேது புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். தகவல்தொடர்பு திறன் மேம்படும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பேச்சால் பல முக்கியமான வேலைகளை முடிப்பீர்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். கடனில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் கேது, புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகர்கள் தங்களின் புதிய திட்டங்களை இக்காலத்தில் செயல்படுத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம். இக்காலத்தில் உங்களின் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, August 24, 2025, 23:44 [IST]
Desktop Bottom Promotion